...

8 views

நானும் ஒரு புகைப்பட கலைஞனே 😉
அத்தனை மதினுட்ப்பம் நிறைந்த விழியிது

எத்தனை பெரும் காட்சிகளையும் கண்ணுக்குள் தேக்கி வைக்கும்

எத்தனை தொலைவிலும் உன் ஒற்றை புள்ளி அது என் விழிகளுக்கு நெருக்கம்

தொடுதிரை இல்லா கண்களிது ஆனால் படும் ஒளியாவும் இமைக்குள் அடக்கம்

ரெட்டை மார்பின் திரை அதுவும் தோற்றுப்போகும்

ஒற்றை வரி இடை மறைவும் விலகிப் போகும்

ஒளி வீசினாலும் இதழ் பேசினாலும் படப்பிடிப்பு நிச்சயம்

நெட்டை தீவை வட்டம் பார்க்க வெட்கம் ஏனோ

காதலன் கண்களில் அகப்படாதது ஏதும் இல்லை கண்ணே

உன் மனமது மயக்கம் கொண்டாலும் என் விழி அது உறங்குவதில்லை

தேடல் காட்சி எப்போதும் உண்டு தாவணி மறைவுக்குள் புதையலை தேடி !
© Iy Thamizhanda