...

2 views

தேவலோக தேடல்…
ஊணில்லா உருவில்லா
ஓரிறையே…

வரையில்லா வான் திரையை
வகுத்த நிறையே…

நீ யில்லா நிகழ்வெல்லாம்
மகிழ்வுண்டா?

நீரில்லா நீலக்கடலில்
அழகுண்டா?

ஏன் ?எதற்கோ ? மானுடனும்
மதியுலகில்…

அதி நுணுக்கம் அறிவியலார்
விதி மறுக்கும்…

உன் கணக்கு உலகறியார்
உன்னிடமே…

மண் பிணக்கு மதியிலார்
மானுடமே…

பொருள் வழங்கும் அருள்வடிவே
ஆண்டவனே… இங்கு

இருள் முழங்க இனம் பிரியும்
தாண்டவமே…

பண்ணில்லா பலவர்க்கம்
பாவிகளே…

எண்ணிலார் ஏற்றத்தாழ்வு
ஆவிகளே…

விண்ணுக்கும் மண்ணுக்கும்
விதிமுறையில்
நெடுந்தொலைவே…

என் கண்ணுக்குத் தெரியாத
உன் வரைகள்
நொடி வளைவே…

அடம்பிடிக்கும் அரக்கர் குணம்
அடியேன் யாமும்…

படம்பிடிக்கும் பாவச் செயல்
பறையடிக்கும்
நாளும் உண்டே…

திடம் நம்பும் தினம் வெம்பும்
திருடர் யாமே…

இடம் வருமே தடம் தருமே
காப்பாய் நீயே…

இறையே…நிறையே…

எம்மை நேர்வழி செலுத்த
நீயும் விரையே…

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #Tamil quotes

© aV ​✍🏾