...

2 views

அவள்......❤️
கருமை நிற கண்ணும்,
வயது வந்த பெண்ணும்,
கன்னம் சிலிர்க்க தீயும்,
எனை வந்து தானே பாயும்..✨

சேர வேண்டும் என்றால்
என்னோடு,
உயிர் தேய வேண்டும் என்றால்.
பாய வேண்டும் என்றால்
என்னோடு,
தலை சாய வேண்டும் என்றால்....... 😌

வளர் செடியில் வந்தால் பூவாக,
எனை ஏற்க வந்த தாயாக,
கோவமும் கொண்டால் பேயாக,
காதல் கொண்டேன் அவள் சேயாக....... 😊

திருந்த சொன்னேன் தானே திருந்தினாள்,
தனை திருத்த சொல்லி வருந்தினாள்,
காதல் கொண்டு அவளை மாற்றினேன்,
என் காதல் பூவை அவள்மேல்
சாற்றினேன்........ 🌹

வந்தால் முழு வென்மதியாக
உயிர் வளர்த்த எம் தமிழாக
கண்டேன் அவள் பாதத்தை ஏற்றினேன்
இதுவே என் சொர்கம் என போற்றினேன்........... ❤️









© Siva