...

13 views

சகியே சகியே!
நானும் நீயும்
பந்தயக் குதிரைகள் போல
விளையாட்டில் மட்டுமன்றி
வாதம் செய்வதிலும்....

விட்டுக்கொடுப்பதில் மட்டும்
ரயில் தண்டவாளம் போல
என்றுமே சேர முடியாமல்
கவலை ஏதுமின்றி.......

ஆனால் எண்ணங்கள்
சில நேரம் பின்னிப் பிணைந்து
உறவு கொள்ளும் இச்சாதாரிப்
பாம்புகள் போல.....

ஆனாலும் சகியே!
அருகாமை அருகி நின்றும்
வெகு தொலைவில்
தூரமாக நின்றாலும் .....

நுண்ணலை தொடர்ந்து
செல்போனில் புகுந்து
நீ புன்னகை பூக்கும்
நொடிப்பொழுதில் ......

உன் செவ்வாய் சென்றடைந்த
பனிக்கூழாக நான்
கரைந்து போகின்றேன்!
உதிரம் கலந்த உணர்வாக......

~ சிரியஸ் ~
© siriuspoetry