மரமும் பெண்ணும் ஒன்றோ?
செடி என்று வேரூன்றி
வைத்து மரமாகி
இன்னும் பூக்கள் பூக்கவில்லையே...
பெண் என்று பிறந்து
வளர்ந்து இன்னும்
பூப்பெய்திட வில்லையே....
மரமும் பெண்ணும் ஒன்றோ?
பூக்கள் பூத்து என்ன பயன்
காயாகவில்லையே ....
பூப்பெய்து என்ன பயன்
இன்னும் பொட்டு வைக்க ஒருவரன் வரலியே....
மரமும் பெண்ணும் ஒன்றோ?
காய்த்து தொங்கி
காய்ந்து போகிறதே தவிர ?
கனியாகவில்லையே ....
கல்யாண முடிச்சி
ஆறுதிங்கள் ஆயிடிச்சு இன்னும் புழுபூச்சி ஒன்று
தங்களியே ....
மரமும் பெண்ணும் ஒன்றோ?
கனிந்து என்ன...
இனிப்பு கொஞ்சம் குறைவுதான் ???
பிள்ளைனு ஒன்றுதான்
பெத்தா அதுவும்
பொட்டபுள்ள ???
மரமும் பெண்ணும் ஒன்றோ?
மரமும் பெண்ணும் ஒன்றே!
பிறந்த மண்ணில் இருந்து
புடுங்கி நட்டாலும்
புகுந்த மண்ணில் வேரூன்ற
செய்கிறாள்....
அவள் இல்லையே
மழைச்சாரல் இல்லையே!
இவள் இல்லையே
அன்புச் சாரல் இல்லையே!
#தமிழ்பக்கம் #பெண்ணியம் #tamilpost #writco post
© Nuradhaag