...

9 views

இசையே
அன்னை வரைந்தத் தாலாட்டிலும் உன்னைக் கண்டேன் ...
அடைமழைத் தூவும் போதும் உன்னைக் கண்டேன் ...
கண்ணீர் கரையும் வேளையிலும் உன்னைக் கண்டேன் ...
காதல் மொழிப் பாடத்திலும் உன்னைக் கண்டேன் ...
இலை தழையின் அசைவிலும்
உன்னைக் கண்டேன் ...
இதயத்தின் ரீங்காரத்திலும் உன்னைக் கண்டேன் ...
நீ இல்லாத இடம் ஏதென்றுத் தேடச் சென்றேன்
என் அசைவின் இசையில் உன்னைக் கண்டுத் தேங்கி நின்றேன் ...
© pridha sigu ❤️