...

8 views

உணருங்கள்......
உங்கள் உருகலுக்கு உதாசீனத்தை தவிர வேறெதுவும் கிடைக்காது
விரக்தியின் வெளிப்பாடாக இதை வெளியிடவில்லை
அனுபவத்தின் எல்லைகளை ஓரளவு தொட்டிருக்கிறேன்
அவமானங்களை அளவிட எதுவுமில்லை,தீண்டிக் கொண்டேயிருக்க வேண்டுமெனில் உங்களளவில் அதை நிகழ்த்திக்கொள்ளுங்கள்,அன்போடு தான் வாழ்வெனில்
எதிர்ப்பார்க்காமல் கொடுக்க பழகுங்கள்,கண்டுகொள்ளவில்லையை தயவுசெய்து கண்டுகொள்ளாதீர்கள்,முடிந்தவரை காதலைத் தவிருங்கள்,முடியாததால் தான் எழுதுகிறேன் ,எதையும் முடித்து வைக்கும் நோக்கமில்லை,முற்றிலுமாக மூழ்குமுன் மீட்டெடுங்கள்,உதவியில்லாமல் உழலும் ஒரு உயிருக்காவது உங்கள் தேவை இருக்கும்,உபயோகமற்று ஒடுங்கி போகும் நிலையில் நெளியுமுன் சற்று சுதாரியுங்கள்,எதிர்ப்பார்ப்பின்றி உங்களை நேசிக்க யாருமில்லை இந்த உண்மையை உறுதியோடு உணருங்கள்,முதன்மை பீடமெல்லாம் ஒருபோதும் கிடைக்காது,நான் வைத்திருக்கிறேனே என்ற வெற்று ஆதங்கத்தையும் வெளியிட வேண்டாம்,அது அவர்கள் இது நீங்கள்!காதலோடு வாழும் வரை கண்ணீரும் சாகாது
இத்தனை அழுகைக்கும் ஒரு அழகியலும் உண்டுதான் புறக்கணிக்கவில்லை,புதிதுமில்லை,புலம்பல் தான் கவிதையில்லை,கருத்துமில்லை........