என் பிம்பம் நீ
என் நிழலாய் நீ
இருக்க உன்
நிஜமாய் நான்
இருக்கிறேன்….
எனை தாலாட்டும்
தென்றலாய்
நீ இருக்க உன்
சுவாசமாய் நான்
இருக்கிறேன்….
வறண்ட என் வாழ்வில்
மழையாய் நீ இருக்க
மழை நனைத்ததும்
வீசும் நறுமணமாய்
நான் இருக்கிறேன்….
என் உயிர் சுமந்து
நீ வாழ உன் உயிராய்
நான் இருக்கிறேன்….
பரந்த வானமாய்
நீ இருக்க
உன் வானில் உலவும்
நிலவாய் நான்
இருக்கிறேன்….
என் உயிராய் நீ இருக்க
உன் உயிர் மூச்சாய்
நான் இருக்கிறேன்….
கல்லாய் நான் இருக்க
எனை செதுக்கும்
உளியாய் நீ
இருக்கிறாய்....
மரமாய் நான்
பூத்துக் குலுங்க
என் வேராய் நீ
எனை தாங்குகிறாய்...
தினம் உனை சுற்றியே
வலம் வரும் மனம்…
உனை தேடியே தவிக்குது
தினம்…
சூரியனை கண்டதும்
உருகும் பனியாய்
என் உயிர் மெல்ல
கரைகிறது உன்
முகம் கண்டதும்…..
என் வானின் சூரியன்
நீ….
விடிவெள்ளி நீ….
எப்போதும் உன்னில் தான்
நான் உறைந்து இருக்கிறேன்….
என் பிம்பம் உன்னில்
காண்கிறேன் நான்....
என் ஆதியும் நீ
அந்தமும் நீயே
என் உயிரானவனே..❤️
- சீதாலக்ஷ்மி
இருக்க உன்
நிஜமாய் நான்
இருக்கிறேன்….
எனை தாலாட்டும்
தென்றலாய்
நீ இருக்க உன்
சுவாசமாய் நான்
இருக்கிறேன்….
வறண்ட என் வாழ்வில்
மழையாய் நீ இருக்க
மழை நனைத்ததும்
வீசும் நறுமணமாய்
நான் இருக்கிறேன்….
என் உயிர் சுமந்து
நீ வாழ உன் உயிராய்
நான் இருக்கிறேன்….
பரந்த வானமாய்
நீ இருக்க
உன் வானில் உலவும்
நிலவாய் நான்
இருக்கிறேன்….
என் உயிராய் நீ இருக்க
உன் உயிர் மூச்சாய்
நான் இருக்கிறேன்….
கல்லாய் நான் இருக்க
எனை செதுக்கும்
உளியாய் நீ
இருக்கிறாய்....
மரமாய் நான்
பூத்துக் குலுங்க
என் வேராய் நீ
எனை தாங்குகிறாய்...
தினம் உனை சுற்றியே
வலம் வரும் மனம்…
உனை தேடியே தவிக்குது
தினம்…
சூரியனை கண்டதும்
உருகும் பனியாய்
என் உயிர் மெல்ல
கரைகிறது உன்
முகம் கண்டதும்…..
என் வானின் சூரியன்
நீ….
விடிவெள்ளி நீ….
எப்போதும் உன்னில் தான்
நான் உறைந்து இருக்கிறேன்….
என் பிம்பம் உன்னில்
காண்கிறேன் நான்....
என் ஆதியும் நீ
அந்தமும் நீயே
என் உயிரானவனே..❤️
- சீதாலக்ஷ்மி