...

13 views

கொரோனா
கொரோனா,
உமக்கு என் நன்றிகள்...
நிசப்தம் எதுவென்று தெரிந்தது உன்னால்...
எம் மண்ணில் ஈரமிருக்கு- என
அறிந்தது உன்னால்...
நீர் கண்ட தூய்மை உன்னால்...
காற்றில் கரித்துகள்கள் இல்லாமல் போனது உன்னால்...
வானில் பறவைகள் பறப்பது உன்னால்...
நெருப்பு மட்டும் அல்ல,
உழையாமையும் சுடும்...
புரிந்தது உன்னால்...
கொலை,
கொள்ளை,
கற்பழிப்பு,
விபத்துக்கள் இல்லை...
இவை யாவும் உன்னால்!
ராம ராஜ்யம் இப்படித்தான் இருக்கும் என்றால்,
அதுவும் உன்னால்!
அதனால்,
உமக்கு என் உளமாற நன்றிகள்...
ஆனால்,
ஏழ்மைக்கு
விடிவு மட்டும் என்னாள்?

அம்பிகாபதி சோமசுந்தரம்