...

5 views

புதுத் தெம்பு......
சிறைப்படுத்த நினைத்த
வேலைப்பளு எல்லாம்
தகர்த்தெறிந்து விட்டு
ஒரு காலைநேரத்தை
சந்தோஷமாக அபகரித்த
அந்த ஒன்றுகூடலின்
அற்புதமான சாட்சியம்
ஒன்று இணையவழி
நழுவி எம் கண்களுக்குள்
ஊடுருவி உற்சாகபானம்
அருந்திய உணர்வில்
நான் கூட சில செக்கன்கள்
மயங்கிப் போனேனடி........
அகத்தின் இணைப்பு
முகத்தில் புன்னகை வழி
ஒரு செய்தி சொல்லும்
பக்குவம் பாரடி தோழி
யாரும் கண்வைக்கப்
போகிறார்கள் கவனமடி தோழி.....
இரவைக் கிழித்தெறிந்து
கொஞ்சம் முறைத்துக்
கொள்ளும் தூக்கத்தை
சுவைக்க மறுத்த கணங்கள்
இன்று கனவுக்குள் வந்து
தொந்தரவு செய்யுதடி தோழி......

~சிரியஸ் ~
© siriuspoetry