...

5 views

வலிக்குப் பின்னால்
மனம்
இறுகி

மதி
கருகி

சுகம் துரு பிடித்த தருணங்கள்

தேகமெல்லாம் பாரமாய் உணர

இன்னும்

கண்களில் தேங்கிய கண்ணீர்

கன்னத்தில் விழாமலே

அடம் பிடிக்கிறது

அகத்தை பிசைந்தபடி..

அகந்தை ஒழிந்திடவே
ஆக்கமுள்ள சிந்தையை

அடிமை செய்தது
எதார்த்த மனம்..

கொப்பளித்த
எண்ணமெல்லாம்

மனதை காயம் செய்ய
வெடித்துப் புண்ணாகியது

வெகுளியின் உணர்வுகள்..

© kamal
#sad #moodoff #lines #writcoapp