...

9 views

அம்மா அழகு தான்
அம்மா
அவள் அழகு தான்!
இருந்திட்டால் ...
எத்தனை வரிகள்
எழுதி எரிந்து
இருப்பேன்
உன்னை பற்றி...
ஏன் சுமந்தாய் ?
பத்து திங்கள்
ஆறு வருடங்களில்
விட்டு செல்ல வா !
அதற்கு ஒற்றை
திங்களிலே கரைத்திருக்கலாமே ?
நீ இன்றி
நான் மட்டுமா ?
எந்தன் வரியும் தாயற்றவளானது ...
உன்னை பற்றி
என்ன எழுத ....
நான் மலர்ந்து வரும்
தருணத்தில்
நீ உதிர்ந்ததையா !
உனக்காக
நான்
வடிக்கும் கவியில்
மெய்யற்று இருக்க
நான் உயிரற்று போகிறேன்
என் தாயவளே !
என்னை அமிர்தம்மகள்
என்றபோது.‌‌.‌.என்னுள்
ஒரு சலசலப்பு
அவள் பெயரோடு என்
அமிர்தத்தை கொண்டு
சென்றுவிட்டாள் என்று !

-~அமிர்த்த மகள் அனுராதா~



© Nuradhaag