...

4 views

குமுறல்
கஞ்சிக்கும் கூழுக்கும்
வழி இல்லாம,
கவுத்து வச்ச சட்டி பானைய
பாத்தப்பெல்லாம்,
கண்ணுல வந்த
தண்ணிய தொடச்சு,
அந்த வானத்த பாத்து
கேட்டேன்,
" ஐயா சாமி, இந்த
கரிச காட்டு மவராசி ,
கால் வயிறு கஞ்சி குடிக்க
கால் ஏக்கார நெலத்துல
கரும்பயும் வாழயும் வெதச்சேன்!
எம் மேல கோவமா!
என் பசில உனக்கு லாபமா?
நட்ட வெதையெல்லாம்
பட்டா காஞ்சு போச்சு,
என் அடுத்த வேல
கூழுக்கு என்ன செய்வேன்
இந்த பாவினு மட்டும்
சொல்லுயா,
கண்ணுல பாக்காத
கடவுளே"



© ❤நான் வாணி ❤