...

12 views

அம்மா!
அவள் ஒரு கனவாய்
பலருக்கு இருக்க...
எனக்காக...
எனக்காக மட்டும்
வந்த வரம் அவள்!
அவள் உயிருக்கு அஞ்சாது
எனக்கு உயிர்
கொடுத்தவள்... என் உயிரினும் மேலானவள்!
நினைத்து நினைத்து
பார்க்கிறேன்...
அவளுக்கு நிகராக
யாரும் வரவில்லை
என் நினைவுகளில் கூட!
பொன்மொழிகளும் பழமொழிகளும் பல உண்டு...
குழவியதனுக்கு தன்
தாய் என்பவள் பிரமிப்பு தான்...
ஏன்...பொன்
காக்கைக்குஞ்சிக் கூட தாய்யவள் தேவதை தானாம்!
கொஞ்சி கொஞ்சி அண்ணம்
இட்டவள்...
தாலாட்டு பாடி துயில்லில்
இட்டவள்...
நோயில் மருத்துவச்சி
ஆனவள்...
தடுமாறும்போது
தாங்கியவள்...
என எண்ணற்று
தோள் குடுத்து
நெற்றியில் முத்தமிட்டாள்!
என் அன்பை வெளிக்காட்ட
வாய்ப்புத் தராதவள்...
அவள் அரவணைப்பை
மட்டும் அள்ளி...
அள்ளி தெளித்தாள்!
ஒருவேளை இறைவன்
இருப்பின்...
நிரையமாட்டான்
இவளின் இடத்தை!
இருந்தும் யாசிக்கிறேன்...
சென்மம் என்று இருந்தால்
வேண்டும் அவள் என் மகளாக!




© kookoo