...

5 views

சொல்ல மறந்த கதை

அவன் ஒரு நிமிட பார்வை என்னுள் ஆயிரம் மின்னலை தோற்றுவிக்க

கண்கள் தினமும் அவன் முகம் காண ஏங்கி தவிக்க

அவன் பெயரை மட்டும் கைகள்
எழுதிட துடிக்க

சுவாச காற்றும் அவன் வாசம் கேட்டு ஏங்கிட

கால்களும் அவன் சென்ற பாதையில் செல்ல நினைக்க

என்னுள் துடிக்கும் இதயமும் அவனை காணும் நிமிடங்களில்
அதிகமாய் துடிக்க

அவனிடம் நீயின்றி ஒரு வாழ்வில்லை என சொல்ல சென்ற
நிமிடம் அவன் வாழ்வில் நான் இல்லை என தெரிந்த பின்

அவன் மகிழ்வீர்காக என்னுள் எழுந்த காதலை என்னுள்ளே புதைத்து வைத்து அவனிடம் சொல்லாத என் காதல் சொல்லமறந்த கதையே...!!!


© All Rights Reserved