...

6 views

வீரத்தமிழ் மகள்
கரம் பிடித்து நடக்கும் மகளாகத் தோன்றியவள்
தோள் வரை வளர்ந்து தோழியாவாள் ...
தவழும் நெஞ்சில் சேயாகித்
துவளும் நேரம் மடி தாங்கித் தாயாவாள்
...
துயர் தரும் நோயாகி அதற்கும் அவளே தீர்வாவாள்...
கல் மேட்டையும் மணல் கூட்டையும் கொண்டு கட்டிடம் அமைப்பாள் ...
அதில் முற்படுகையிலும் பொன் மெத்தையிடுவாள் ..
சொல்லொன்று சொன்னால் பொறுக்கமாட்டாள்
துயரென வருவோரிடம் கடுக்க மாட்டாள்.
அடுப்படி காலம் முதல் அலறல் பேசிக் காலம்வரை
தன்னைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டவள் ..
மலரினும் மெல்லியவள்
இரும்பினும் வலியவள் ...
இருக்கும் இடம் கண்டு வாழப் பழகியவள்
இருட்டை ஒளியாக்கும் இயற்கை தீ அவள்...
பிறர் துன்பம் கண்டால் மெழுகென மருகிடுவாள்
பதர் விசப் பார்வைக் கண்டால் கழுகென மாறிடுவாள்..
தன் இரத்தத்தையும் பாலாக்கித் தேன் கிண்ணத்தில்
திகட்டிட ஊட்டிடுவாள்
நகைமுகத்துடையாள் ..
அன்பை மருந்தாக்கிக் காயங்களாற்றுபவள்
பண்பில் களித்திருந்த
பண்பாட்டின் மருஉரு அவள்..
புவியை விடப் பொறுமைக் கொண்டவள் ..
பல்லாயிரம் வருடம் பெருமை கொண்டவள் ...
துணையை இழந்து தமயனை இழந்த போதிலும்
தன் பச்சிளம் குழந்தையைப்
போருக்கணுப்பிய வீரத் தாய் அவள் ...
பலியிட்டக் காரணத்தால் பொற்சிலம்பேந்தி சங்கமிட்ட மதுரையையும் ,
செங்கோல் கொண்ட மன்னனையும் சிலம்பெய்தி எரித்த சீரும் தீ அவள்...
புலியையும் முறத்தால் விரட்டிய சிங்கப் பெண் அவள் ...
சீறிய ஆங்கிலேயரின்
சிரத்தையும் கொய்திய
வீரத் தமிழ் மகள்...
நீள் சடை , பிறநெற்றியில் நிறை குங்குமம் முதல்
முக்கால் சட்டை , செங்கூந்தல் வரை அவளுக்கு நிகர் அவளே ...
அவளின் தியாகம் கண்டு பகலதும் பணிந்திடும்
அவள் உயரம் கண்டு இமயமும் குறுகிடும்...
அவள் மனம் சோர்வடைந்தால்
மழையும் நீரும் நனைந்திடும்
அவள் தலை சாய்க்க வெண் நிலவும் இடம் தரும்...
அவள் சிறப்பைச் சிறப்பிக்கச் செவ்வாயும் முற்படும்
வாழ்த்த சொல்லின்றிச் சிவந்து சிறைப்படும் ...
அவளைக் குறித்து சில வரிகளில் முடித்திட அவள் பதுமை மட்டுமல்ல
பல புதிர்களைக் கொண்ட புதுமை ..
ஆதலால், அவளை முடித்திட மனமின்றி மடிகிறது எனது பேனா மை..

© pridha sigu ❤️