...

15 views

சந்திரன்
சந்திரனே💖..
எப்படி சொல்வதென்று தெரியவில்லை
உன் மீது நான் கொண்ட காதலினை🥰
என்று விழுந்தேன்?
என்‌அன்னை உன்னை காட்டி சோறூட்டியபோதா?
உன்‌ முழுமுகம் பார்த்த பௌர்ணமிகளிலா??🌝
நீ தேய்ந்த போகிற
தேய்பிறைகளிலா?🌛
வளர்ந்து வரும் வளர்பிறைகளிலா?🌜
உன்னை காணாமல் வேதனையுற்ற
அமாவாசைகளிலா?🥺
அல்லது உன் முழு முகம் காண முழுமாதம் காத்திருந்த காத்திருப்பிலா?? 😔
அப்ப்பா!! வார்த்தைகள் கிடைக்கவில்லை
உன் எழிலை பாட....😍
மதிமயங்கி போனேன் முழுமதியே உன்னால்..😇
உணர்ச்சிகள் மேலோங்கிட திணறிப்போகிறேன் தீராத காதலினால்...💓
நான் மட்டுமா காதல் கொண்டேன்?
இந்த புவியே உந்தன் ரசிகர் மன்றம் என்பது உனக்கு தெரியுமா??
பூமியில் உள்ள அனைவரும் உன்னை ரசிப்பதினால் நாணமுற்று மேகங்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறாயா??😉
இல்லை மேகங்கள் உன் மீது கொண்ட ஆசையினால் தழுவமுயலுகிறதா??
தெரியவில்லை..
எப்படியானாலும் உன் முகம் மறைக்கும் மேகங்கள் என் காதலுக்கு எதிரிகளே..😠
உன் ஈர்ப்பினால் கொந்தளிக்கும் கடலினை போல என் இதயம் கொந்தளிக்கிறதே தனியாத காதலினால்..😩
உலக உயிர்கள் இரவினை விரும்புவது உன்னாலே..
அதனாலே நீ விடைபெறும் விடியல்களில் இலைகள் கண்ணீர் சிந்துகிறது பனித்துளிகளாய்...💦
நீ மறைய மறைய என்‌கண்ணீரும் கரைபுரண்டு ஓடுகிறது பனித்துளிகளோடு..😣😥😥😢
உன் மீது நான் கொண்ட உயர் காதலினை அறிவாயா??😚
உன்னோடு சேர்ந்து வானில் தோன்றும் விண்மீனாய் ✨
நான் மாற வரம் ஒன்று தருவாயா?🥺
ஏங்குகிறேன்..💞


இப்படிக்கு
உன்‌ உயிர்க்காதலி பூமியிலிருந்து...