...

1 views

அழகு
இந்த ரதியை கண்டு
என் மதி மயங்குது
தீ நிறம் அவள்
பால் பருவம் முடித்தவள்
அவள் கன்னத்தில் இருந்த
சிறு மச்சம் ஒன்று
திருஷ்டி பொட்டாக ஒட்டியிருந்தது
மலராத பூ ஒன்று மலர்ந்ததென்ன இவள்
விரல் பட்டு
சோலை ஒன்றில்
சேலை கட்டிய மயில் போல்
நடந்தால் மனவரை நோக்கி
என் மனமாலையில் இருந்த ரோஜா பூவும் சொன்னது
இவள் அழகில் நான் தோற்று விட்டேன் என்று