அவளது பயணம்....
அவள் ஆழமான
தூக்கத்திற்கு சென்று விட்டாள்.
எங்களை மாத்திரம்
அழ வைத்து விட்டு.
சத்தமாக அழுது விடாதீர்கள்!
அவளது அமைதிப் பயணம்
சற்றும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
கனவுலகில் இனி அவள் வருவாள்
எந்த வலிகளும் அற்ற புன்னகையுடன்
நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என்று கண்சிமிட்டிச் சொன்னவள்
இன்று கண்ணயர்ந்து தூங்குகிறாள்
நேசங்கள் மட்டும் அவளின்றி
பரிதாபமாக கண்ணீர் வழிய
சரிசெய்ய முடியாத சோகத்தில்.....
சோகங்கள் என்றும் நிலையானது
என்று யாரும் எண்ணிவிடக்கூடாது
என்று அடிக்கடி சொல்வாள்.
இந்த சோகத்தையும் சேர்த்துத் தான்...
அவள் உண்மைகளைப்
புரிந்து கொண்டதால்
பொய்யர்களின் மத்தியில்
சேதப்பட்டுப் போனாள்.
இனி அவள் வரமாட்டாள்.
பொய்யர்களின் தேசத்திற்கு....
அவள் பயணப்பட்டது
நிஜங்களின் மாளிகைக்கு....
போய்விடு பெண்ணே!
அதுவே உனக்கு பொருத்தமான இடம்....
© siriuspoetry
தூக்கத்திற்கு சென்று விட்டாள்.
எங்களை மாத்திரம்
அழ வைத்து விட்டு.
சத்தமாக அழுது விடாதீர்கள்!
அவளது அமைதிப் பயணம்
சற்றும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.
கனவுலகில் இனி அவள் வருவாள்
எந்த வலிகளும் அற்ற புன்னகையுடன்
நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என்று கண்சிமிட்டிச் சொன்னவள்
இன்று கண்ணயர்ந்து தூங்குகிறாள்
நேசங்கள் மட்டும் அவளின்றி
பரிதாபமாக கண்ணீர் வழிய
சரிசெய்ய முடியாத சோகத்தில்.....
சோகங்கள் என்றும் நிலையானது
என்று யாரும் எண்ணிவிடக்கூடாது
என்று அடிக்கடி சொல்வாள்.
இந்த சோகத்தையும் சேர்த்துத் தான்...
அவள் உண்மைகளைப்
புரிந்து கொண்டதால்
பொய்யர்களின் மத்தியில்
சேதப்பட்டுப் போனாள்.
இனி அவள் வரமாட்டாள்.
பொய்யர்களின் தேசத்திற்கு....
அவள் பயணப்பட்டது
நிஜங்களின் மாளிகைக்கு....
போய்விடு பெண்ணே!
அதுவே உனக்கு பொருத்தமான இடம்....
© siriuspoetry