...

1 views

மனதுடன் போர்
மனதுடன்
சிந்தனை போர்
தொடர்ந்தபடியே இருக்க

சீண்டி வந்த தாக்கங்களை
தவிர்க்க முயன்ற போதும்
தவிப்புகள் ஏனோ
வென்று விட்டன

சாகா வரம் யாரும் பெறவில்லை
சகித்துக்கொள்ளவும் பழகவில்லை
என்ன இந்த மானுடம்
எதிலுமிந்த கீழ்த்தனம்

மிச்சமுள்ள பள்ளத்தில்
மேடு காணாத
இந்த அற்ப நிலையில்
சொற்ப கருணையும்
மனம் பழகி கொள்ளவில்லையெனில்
சோகமான வினைகள்
சம்பவிக்கும்..
© kamal

Related Stories