...

5 views

உன் விழிதனிலே...
ஏனோ செய்கிறாய்
என்னுள்ளே...

உனை படிக்க
நினைத்தேன்...

நீ எனையே புத்தகமாக்கிவிட்டாய்...

எனையே நான் படிக்கிறேன்
உன்னுடனான என் பக்கங்களை...

ஒரு வரியும்
புரிந்திடவில்லை...

உன் விழிதனில் தான்
என் சுவாசம் என்பதை மட்டுமே
அறிந்துகொண்டேனடா...

© Nandinipriya Maheswaran