...

13 views

மாறாமல் நிலைப்பது சொந்தம் மட்டுமே
நெடுஞ்சாலைகளின் வருகையால்
நெற் பயிர் வயல்கள் காணாமல் போய்
நெடுந்தூரம் சென்றது பறவை இனங்கள்

குறுகலான ரோடுகள் அகல படுத்தி
குளம் குட்டை இருந்த இடம் மறைந்து
குடியிருப்பு வீடுகள் ஓங்கி நிற்கிறது

தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்து
தெறித்து ஓட வைக்கிறது
தெரியாதோரை கண்டது போல

பார்த்து வெகுநாட்கள் ஆயிற்றே என
பக்கத்து வீட்டு அக்கா நலம் விசாரிக்க
பதுங்கியது திரண்ட தெரு நாய்கள்

பல நாள் கழித்து சொல்லாமல் வந்ததால்
பதுங்கி வீட்டினுள் நுழைந்து
பயம் காட்டாலாம் என்று பார்த்தால்

தீடீரென வந்திருக்காயே
தீயாய் சுரம் சுடுகிறதோ என
தீவிர நல விசாரிப்பு நுழைந்தவுடன்

கட்டி அணைத்த பாட்டியின் அன்பும்
கன்னம் கிள்ளிய அண்ணனின் குறும்பும்
கண்ணில் நீர் கசிந்தாலும் காட்டி கொள்ளாமல்

ஒரு நாளோ இரு நாள் விடுமுறையோ
ஓரே பண்டிகை நாள் போல பரபரப்பும்
ஓங்கிடும் மகளதிகாரம் வீட்டினுள்

மாதம் கடந்து திரும்பினாலும் அனைத்தும்
மாறி வளர்ந்து வரும் சொந்த ஊரில்
மாறாமல் நிலைப்பது சொந்தத்தின் பாசம்..

© Shanmuga Priya M

#shanscribbles #tamilum_shanmuvum
#சொந்தம் #சொந்தஊர்