...

1 views

சோகங்களுடன். ஓர் சில வரிகள்
சோகங்ககளை
கடல் நீரில் உமிழ்ந்தேன்

மாசில்லா நீர் சொன்னது

எனக்குள் இந்த
பொறுமை வருவதற்கு
நானும் இப்படியாக
பல எச்சில்களை உமிழ்ந்தேன்
அலைகளாக என
பதில் சொன்னது..

எதற்கெடுத்தாலும் வடிகால்
தேடுகிறோம்
நமது சுவடுகளை நாமே அழித்துக்கொண்டு..

ஆறுதல் தேவையென
ஆர்ப்பாட்டம் செய்யும் மனதிடம்
ஆசுவாசத்தை யாரும் விற்பதில்லை
ஆழமாய் மூச்சிழுக்க செய்திடு

அவை உனக்குள்ளே ஓர்
உயரிய நம்பிக்கை பிராணனை
தரும்..
© kamal