...

6 views

தென்னந்தோப்போரம்
தென்னந்தோப்போரம்
வீசுதடி உன் காத்து
தாவணி போட்டவளே
தவிக்கிதடி என் மூச்சு!

உன்னழக பார்க்கையில
காற்றுக்கும் வெட்கமடி
வேப்பமரத்து இலைக்கூட
அசையாம நிக்கிதடி!

பொன் சிரிப்பு
உன் சிரிப்பு
நெருங்கி வந்திட
ஏன் மறுப்பு!

மாங்காய் மரத்தடியில்
அன்னாந்து பார்த்தவளே
மொத்த அழகை காட்டி
அடியோடு சாய்த்தவளே!

கிறுக்கு பிடித்தது போல்
தலை எனக்கு சுத்துதடி
மந்திரித்து விட்டது போல்
கிறங்கினான் போனேனடி!

அணிலுக்கும் ஆசைவரும்
கொவ்வை பழம் கடிக்கத்தான்
ஆசைக்கே ஆசைவரும்
உன்னிதழை ருசிக்கத்தான்!

ஆளுங்க வந்து சேருமுன்னே
அத்தான்னு சொல்லிப்புடு
ஆத்தா அழைக்கும் முன்னே
வந்தொரு முத்தம்கொடு!

மீண்டுமொரு விடுமுறை
எப்ப வருமோ தெரியாது
அது வரை மனசும் தாங்காது
வா என்னழகே இப்பவே
உன் இதயத்தில் நானும்
என் இதயத்தில் நீயம்
இடம்மாறி அமர்ந்து கொள்ளலாம்!
- சங்கத்தமிழன்.