![...](https://api.writco.in/assets/images/post/user/poem/1078221229060349734.webp)
3 views
என் மனதை மகிழ்ச்சியில் குளிப்பாட்டு
பிரம்மனின் கற்பனையே
விண்ணுலக தேவதையே
என்னுடைய விழிக்குள்
வந்து விழுந்த சிலையழகே!
நாலடி சுவர்க்குள் நீயிருந்து
நித்தம் என்னை தேட வைத்தாய்
மக்காய் இருந்தென்னை
பக்குவமாய் பாட வைத்தாய்!
ஆடிக் காற்றில் அல்லல் பட்டு
அம்மிக்கல்லு பறப்பது போல்
என் நெஞ்சம் அல்லல் பட்டு
ஏங்கி தவிக்குதடி இப்போ!
வாசமெழுப்பி தேனிதழை காட்டி
வண்டுயென்னை கவர்ந்து விட்டாய்
தேடி வந்து தீண்ட வந்தால்
தேகத்தை ஏனடி மூடிக்கொண்டாய்!
உன்னை பார்த்தால் போதும்
மனம் நிம்மதி காணுமடி
உன் தரிசனம் கிடைக்கையில்
சொர்க்கம் போல் தோன்றுமடி!
பூக்களின் மீது
தென்றலின் காதலைப் போல்
உந்தன் மீது எனது காதலும்,
காற்று திசை மாறுவது போல்
நான் உன்னை விட்டு விலக மாட்டேனடி!
உனக்கு நீயே போட்டுக்கொண்ட
திரையெனும் ஜன்னலை திறந்து
கொஞ்சம் தரிசனம் காட்டு
என் மனதை மகிழ்ச்சியில் குளிப்பாட்டு.
-சங்கத்தமிழன்
விண்ணுலக தேவதையே
என்னுடைய விழிக்குள்
வந்து விழுந்த சிலையழகே!
நாலடி சுவர்க்குள் நீயிருந்து
நித்தம் என்னை தேட வைத்தாய்
மக்காய் இருந்தென்னை
பக்குவமாய் பாட வைத்தாய்!
ஆடிக் காற்றில் அல்லல் பட்டு
அம்மிக்கல்லு பறப்பது போல்
என் நெஞ்சம் அல்லல் பட்டு
ஏங்கி தவிக்குதடி இப்போ!
வாசமெழுப்பி தேனிதழை காட்டி
வண்டுயென்னை கவர்ந்து விட்டாய்
தேடி வந்து தீண்ட வந்தால்
தேகத்தை ஏனடி மூடிக்கொண்டாய்!
உன்னை பார்த்தால் போதும்
மனம் நிம்மதி காணுமடி
உன் தரிசனம் கிடைக்கையில்
சொர்க்கம் போல் தோன்றுமடி!
பூக்களின் மீது
தென்றலின் காதலைப் போல்
உந்தன் மீது எனது காதலும்,
காற்று திசை மாறுவது போல்
நான் உன்னை விட்டு விலக மாட்டேனடி!
உனக்கு நீயே போட்டுக்கொண்ட
திரையெனும் ஜன்னலை திறந்து
கொஞ்சம் தரிசனம் காட்டு
என் மனதை மகிழ்ச்சியில் குளிப்பாட்டு.
-சங்கத்தமிழன்
Related Stories
7 Likes
0
Comments
7 Likes
0
Comments