...

4 views

பாடு
ஏராளமான கிருபை தந்ததால் பாடு
முழங்காலில் முறையிடும் ஒவ்வொரு நிமிடமும்
உன் குறைகள் கேட்டதால் பாடு
பாடு
பரலோகம் உன்னை அறிந்ததால் பாடு
பாடு
ஜீவ தேவன் உன்னை அறிந்ததால் பாடு

அல்லல் நீக்கி போட்டு
அரவணைத்து அன்பினால்
ஆனந்தம் அளித்ததால் பாடு
மரங்கள் குளங்கள் எல்லாம்
வாடிப்போன பொழுது
தைரியம் தந்ததால் பாடு

பாடு

மேலே காணும் வானமும்
கீழே உள்ள பூமியும்
பாயைப் போல சுருண்டு சுருண்டு
வெந்து வெந்து அழிந்தாலும்
என்றென்றும் மாறாது அவர் வாக்கு
கரம்பிடித்தவர் உன்னை கைவிட மாட்டார்
பாடு


நித்திய நாதர் ஏசுவே நித்திய நித்திய காலமாய்
வாழ்வை உனக்கு வாக்களித்து
வாழ்வின் துணை ஆனதால்
அன்பின் தெய்வம் ஏசுவே
அளவில்லாமல் பாடுவாய்
ஈடு செய்ய
துதித்துக்கொண்டே இருப்பாய்

பாடு ஆதி தேவன் உன்னை அறிந்ததால் பாடு
பாடு அந்தம் வரை காத்துக் கொள்வார் பாடு

© gladis