...

9 views

என்னென்ன சொல்லுமோ...
ஓர் நன்நாளில் இவற்றுக்கு
பேச்சு வர,உன்னிடம் என்ன இவை பேசுமென்று செவிகொடுத்து கேட்போமா....

இரவெல்லாம் உன்னோடு உறவாடி,மறு இரவு வரும்வரை பகலெல்லாம் காத்திருப்பேன்..
இப்படிக்கு தலையனை

என்னை அடிக்கடி பூசி உன் செவ்விதழை அழுக்காக்காதே..என் மனமும் வலிக்கிறது..
இப்படிக்கு உதட்டுச்சாயம்

மேலும் கீழுமாய் என்னை அலையவிட்டு அந்த
ஓசையில் நீ மகிழ்வதால் எனக்கும் மகிழ்ச்சியே..
இப்படிக்கு வளையல்

கைகளில் கசங்கி மூச்சுமுட்டினாலும் உன் முகத்தினில் படர்வதால் உயிர் வாழ்கிறேன்..
இப்படிக்கு கைக்குட்டை

என்னை அதிகம் பூசாதே,எத்தனை பேரிடம் வசவு வாங்குவேன்,உன் அழகை குறைக்கிறேனென...
இப்படிக்கு முகப்பூச்சு

குறிப்பிட்ட விலையில் இருந்த என்னை விலை
மதிப்பற்றதாக்கியது உன் மூச்சுக்காற்று..
இப்படிக்கு மூக்குத்தி

அதிஷ்டமென்பது யாதெனில் நானுள்ள இடமே, எப்பொழுதும் அண்ணாந்து பார்த்து ரசிப்பேனே..
இப்படிக்கு கால் கொலுசு

எனக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால் நிச்சயம்
உன்னை மாற்று உடை மாற்ற விட மாட்டேன்..
இப்படிக்கு உடுத்திய உடை

பாரமே என்று ஆனாலும் கூட சுகமானதொரு
பாரமெனும் வகையில் படுவாய்..
இப்படிக்கு காலனி

© பினோய் பிரசாத்