...

4 views

அந்தி வேளையில் அகத்திலோர் வானவில்
சாம்பல் நிறத்தை
சாய்த்துக் கொண்ட வானம்
ஊதா நிறத்திடம்
புன்னகை செய்தது..

மேலிருந்து பரவி வந்த வெள்ளியோடை
வெண்மை நிறமோ
வழி விடுவென பாய்ந்தது..

கருநீளமாய் உரு மாறிய சந்தி
வேளையில் இந்த வானம்
என்ன செய்யும்??..
மொட்டை மாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த
என் விழிகளை ஈர்த்துச்செல்லும்..

நான் வெளியேற விரும்பினேன்
அந்த தருணங்களில் என்னை கைது செய்து ஆனந்தத்தை அகத்திற்குள் இறக்கியது இந்த மாலை வேளை

அகமெல்லாம் இன்பமாய்
உணருமிந்த வானவில்
இன்னும் நீடிக்க வேண்டும்
அன்றாடத்தின் நிமிடங்களில்..

#nature
@kamala.kamal
© kamal