...

5 views

கவிதைகளும் மயங்கிடுதே!
கவிதைகளும் மயங்கிடுதே! உந்தன் கண் பார்வையில்...

கேலிகளின் வலிகளெல்லாம் - உந்தன் ஒற்றை பார்வையில் மறக்கிறதே!

என் ஓர் பார்வையில் நீ என் மனம் புரிவதை எண்ணி வியக்கிறேனடா!

ஆற்ப்பாட்டமில்லா உன் குறுஞ்சிரிப்பில்
பூட்டியுள்ள என் இதழ்களும்
திறக்கிறதே!

கற்பனைகளில் வாழ்ந்தவள்
உன் கண்களில் நிஜங்களை உணர்கிறேனடா!

தனிமையின் துணையில்
இன்று என்னுடன் நீ
சிறு குறுஞ்செய்திகளுடன்...

© Nandinipriya Maheswaran