...

7 views

உறுதி கொள்🖤
விசாரணைகளும்
விசாரிப்புகளும் வீண்,
பின்தொடரல்கள்
பயனளிக்காது,
கண்ணைக் கண்டாலே
கண்டுகொள்ள முடியும்
எதையும் பறித்துவிட
முடியாது
இதயத்தை கொடுத்தாயிற்று!
எங்கேயும் போகவில்லை
பின் திரும்புங்கள்
உங்கள் பிதற்றல்களை
கவனிக்கவே
பெருமௌனம் காக்கிறேன்!
அறுத்துக் கட்ட முடியாது
கட்ட நினைக்கும்
எண்ணங்கள் தான்
அறுந்து போகும்!
ஏதேதோ கேட்கிறீர்கள்
இருப்பதெல்லாம்
அதே பதில் தான்
அதே திமிர் தான்
ஆனால் அதே ஆசை அல்ல
அதிகரித்திருக்கலாம்
அங்கு என்ன பார்வை(ஊடுருவல்,உன்னிப்பு)
இங்கேயே தான் இருப்பேன்
ஒப்புதல் கொடுங்கள்
நான் உங்கள் மகள்😎