...

1 views

வாழ்வைத் தேடி....‌
ஏதேதோ எண்ணங்கள்.....
வீழ்ந்து கிடந்ததும்....
எழாமலே வாழ்வதும்...‌
போன்றதொரு பிரமை‌....
அது பிரமையா?
இல்லை உண்மையா?
எதிலும் நிலையாக நிற்கவிடுவதில்லை....
சுற்றமும்.... சூழ்நிலைகளும்.....
ஒளியென நினைத்து முன்னேறுகையில்....
பாதாளத்தில் தள்ளிவிடுகிறது....
பாதாளத்திலேயே மக்கி விடுவோமோ?
முடியாது.... - நான்
தோல்வியடைந்தது உண்மை தான்....
ஆனால்,
எழுந்தே தீருவேன்....
ஆயிரம் கானல்கள் முன்தோன்றினாலும்....
எங்கேனும் ஓர் இடுக்கில்.... - எனக்கான
ஒளி(லி) இருக்குமல்லவா?
உதிரங்கள் எல்லாம் உதிர்ந்து போனாலும்....
சவமாய் மாறும் வரையிலும் தொடரும்...
என் தேடலும்....
முயற்சியும்....
எனக்கான வாழ்வைத் தேடி....

- ஆலோன் மகரி

© aalonmagari