...

1 views

யாரோ ஒருவன் தானோ..!?
முடக்குவாதம்
மூட நம்பிக்கை
சொடுக்கிச்
சொல்லும்
சோதிடமோ..!?

தடுக்கிவிழும்
தடையனைத்தும்
கொடுக்கும் படி
உணை உயர்த்தும்
மடிக்கும் மதம்
வதம் உனக்கோ..!?

கொதிக்கும் குணம்
குரல்வளை நெறிக்கும்
சதிக்கு சக்களத்தி
சவமே சாபம்
மதிக்கும் மனம்
மிதிக்கப்படுவதும் ஏனோ..!?

உதிக்கும் காலை
உத்வேகம் கொள்ளும்
திதிக்குத் தீபம்
தீமையைச் சொல்லும்
பொதிக்கும் பணம்
பிணமேடை தானோ..!?

நதிக்கு நிகராய்
குருதி பருகும்
கூட்டம்
கதியென்றே கருவறை
பிளந்தேன்
கருமம் கைதியாய்
உலகில் நுழைந்தேன்

வதி கிடைத்தும்
பதி நனைத்து விதி மீது
வீண்பழி சுமத்தின்
விளங்காத மனிதா..!?

எது உனக்கோ
சிம்ம சொப்பனம்?
தப்பான தாழால்
தகர்த்தெறியப்பட்ட
தகர டப்பாவாகவே
தருமம் இங்கே
தள்ளாடுகிறதோ..!?

எதற்கு நானோ
ஏங்கிக் கொள்கிறேன்,
குதர்க்கம் ஒன்றும்
புதிதல்லவே
குரங்கிலிருந்து தானே
மனிதன் என்றாரே…

இருக்கும் இறையை
இல்லதாக்கும்
இயந்திர மனம்
வியந்தீரா வண்ணம்
வாகையாய் படைத்ததும்
யாரோ ஒருவன் தானோ..!?

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ​✍🏾