...

3 views

கடந்து விடவே நினைக்கிறேன் 2
மழைக்காலத்தை வரவேற்கும் இந்த தும்பியினங்களின் மூலம் தான்  இப்போதெல்லாம் உனக்கான செய்தியை சொல்லி அனுப்பி வைக்கிறேன்

ஆயிரம் முறை ஒத்துவராதென
சப்பைக்கட்டு கட்டினாலும்
உள்ளே நெருஞ்சிப்பூ ஒன்று மலரத்தான் செய்கிறது

காற்றின் முகவரி தேடியலையும் இந்த மழைக்கால மேகங்கள்
என்னை கடந்து சென்று கொண்டிருக்கின்றன

காய்ந்த நெருஞ்சி முள் நிதர்சனத்தை நிறுத்தி நறுக்கென குத்துகிறது
இந்த கவிதைகளையும்
கரைந்துபோய்கொண்டிருக்கும் எந்தன் காத்திருப்புகளையும்!!
- மதிஒளி சரவணன்