...

9 views

யார் நீ???

யார் நீ????
எதற்காக என்னுள் வந்தாய்????
மூச்சு காற்றோடு கலந்தாய்
மௌனத்தோடு பேசினாய்
கண்ணீரால் நனைத்தாய்
தனிமையில் நெருங்கினாய்
என் நிழலை உன் உருவமாக்கினாய்
சுகத்தோடு வலியையும் இணைத்து பரிசாக்கினாய்
தேகத்தை விட்டு என் உயிரை மட்டும் எடுத்து எங்கே சென்றாய்
அதில் உன் உயிரை நிரப்பி  எனை எதற்கு உறைய செய்தாய்
காதல் என்ற ஒற்றை சொல்லில் நம் உறவை  அடக்க திணருகிறேன்
போக திசையின்றி தவிக்கிறேன்
எந்நாள் என்னுடன் சேர்ந்து  நம்மை மீட்டெடுப்பாய்???