...

3 views

ப்ரியமுடன் ஒரு வாழ்த்து!
பிரியமுடன் வாழ்த்து
பிரிவை வெகுமதியாய் அளித்த நட்புக்கு"

கண்டதும் கொண்ட மயக்கம் அல்ல
காணும் பொழுதெல்லாம் ஏற்பட்ட துடிப்பு

பேசிய ஓரிரு வார்த்தைகளை புதையலென
பாதுகாத்து வைத்த நெஞ்சு
படுகுழியென அறியாது அலப்பறைகள் செய்திடத்தான் கடந்தது காலமும்!

பதின்ம பருவத்தில் பாந்தமாய் அல்லாது பரிகாசம் செய்து திரிந்தவளை நோக்கி நேசமாய் ஒரு புன்னகையை வீசிச் சென்றாய்

நேற்றைய தினத்தின் இன்றைய தொடர்ச்சியாக நீட்டிய கரத்தினை ஒருநொடி சந்தேகித்த மனதுக்கு
"என் கூடவெல்லாம் பேச மாட்டாயாவென"
இரைஞ்சும் அந்த குரல் இன்றும் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது எதிரொலியென!

வாழ்த்து அட்டைகளை பறிமாறிக் கொண்ட அன்பு நம்பிக்கையை பறிமாறிக் கொள்ள மறந்து போனதேனோ?

சென்ற வருடத்தில் காத்திருந்த ஒற்றை குறுஞ்செய்தியை புன்னகையோடு தாமதப்படுத்திய கணங்கள் இன்று கனமேற்றி வாழ்த்து
வாரா பாலாற்று வெள்ளமென புரிய வைத்தது உலகம்!

மூன்றாம் நபரானபோது சகித்து கொண்டு வந்த அறிவு அந்நியராய் உணர வைத்தபின் இடித்துரைக்கிறது இதயமதை!

எழுத தவிர்க்க எண்ணிய இந்நாளில் இறுதியில் எழுதிவிட்டேன் பிரியமுடன் வாழ்த்து ஒன்றை
பிரிவை வெகுமதியாய் அளித்த நட்புக்கு!