...

5 views

💕 மௌனம் காத்தால் மட்டும் உண்மை பொய்யாகிடுமா !
மௌனம் காத்தால் மட்டும் உண்மை பொய்யாகிடுமா
நான் உன் மீது கொண்ட காதலும்
நீ என் மீது கொண்ட காதலும் நிஜம்

உறவுகளிடம் சிக்கி தவிக்கும் உன் மனம்
கொஞ்சம் கண் திறந்து பார்த்தல் உண்மை புரியும்

கற்பனை வாழ்விற்கு சந்தோஷம் என பெயரிட்டு
நிஜ வாழ்க்கையை நிசப்தம் ஆக்குகிறாய் என்று

என் காதலுக்கு பதிலளிக்க உன் உதடு மறுத்தாலும்
உன் கண்கள் சொல்லத் துடிப்பதை நான்அறிவேன்

இருப்பினும் இதழின்சொல் சுவைத்திட
துடிக்கிறது என் மனம் சொல்லடி

இதயம் கலந்திட ஒரு சொல்
இதயம் வதைத்திட ஒரு சொல்

நீ எதை சொல்லப் போகிறாய் !
© Iy Thamizhanda