...

5 views

என்னை திருடிக்கொண்டவளே
மாலை நேரம்
ஓய்வெடுக்கும் ஆதவன்
விளக்கேற்றும் வெண்ணிலா,
நீயும் நானும்
மதியின் ஒளியில்
கைக்கோர்த்து நடப்போமா,
நம் விழிகளுக்கு
நட்சத்திரத்தை விருந்தாக்குவோமா,
விடியும்வரை
பனித்துளியோடு உறவாடுவோமா,
நம் கூடலுக்கு
புது இலக்கியம் படைப்போமா,
என்னோடு நீயும்
உன்மடியில் நானும் சாய்ந்து
கதைகள் ஆயிரம் பேசுவோமா,
ஆசைகள் நிஜமாகுமா
இப்போதே நிறையாகுமா?
சொல்லடி என்னை திருடிக்கொண்டவளே.
-சங்கத்தமிழன்