...

8 views

தீபமாகிய கோவம்
உன் இமையோடு என் இமைகள்
இமைக்காமல் இசை பாட,
என் இதழோடு உன் இதழ்கள்
முத்தக் (கவி) பாட,
எனக்காக நீயும்
உனக்காக நானுமாய் இராமல்,
நாமக்காக நாமாய் சதா உன் நாமம் தினம் நான் இசைக்க,
இரவிற்காக காத்திருக்கும் நிலவு போல,
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்...
என் கோபத்தை நீ வெல்வாயோ!
இல்லை,
கூண்டோடு எனை அள்ளுவாயோ!
உன் அரவணைப்பில் அணையும் தீபமாக
நானும் என் கோபமும்...

❤️ ரோகிணிஜெயராம்