...

1 views

இனிய இரவே..
வெள்ளி நிலவை 

அள்ளி கொஞ்சும் 

கொள்ளை அழகே 

வான் எல்லை வளைவில் 

முல்லை போன்ற 

பூக்கும் இரவே 


நான் வான் வரை 

வந்திட விதியில்லை 

என் வரிகளின் 

மொழியில் சதி இல்லை 


ஒவ்வொரு இரவும் 

பிற்பகல் வரவும் 

நினைக்கின்றேன்

 

கற்பகம் போன்று 

கற்பனை கவிகள் 

முனைக்கின்றேன் 


துவண்டிடும் பொழுதில் 

துவட்டிடும் வலியில் 

நான் ஏங்குகிறேன் 


துயில் காத்திடும் 

இரவின் தூய்மையில் 

நான் தூங்குகிறேன்



#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾