...

1 views

விடியல்
காலை கதிரவனுகாக
காத்திருந்தேன்
விடியலுக்கு தெரியாது
உறங்குவதற்கு என்று
தூங்கா இரவுகள்
கண்ணீருடன் நகரும் தருணங்கள் ..
இரவே வே‌ண்டா‌ம்
தனிமை என்னை வதைக்கிறது...
பகல் பழகிய எனக்கு
இரவு வாழ்க்கை இருளாக சூழ்ந்து
இரக்கமற்ற மானிடர்களை
நினைவு படுத்துகிறது...
உனக்காக மட்டும்
வாழ கற்றுக்கொள்
அதுவே உன் இலக்கை அடைய வழிவகுக்கும்..

© All Rights Reserved