...

12 views

மெய் தேடல் தொடங்கியதே - 2

ஜார்டின் நாட்டின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில், ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி என்னும் இரட்டை சகோதரிகள் தங்கள் அரச குடும்பத்துடன் ஒரு அழகான கோட்டையில் வசித்து வந்தனர்.

லார்ட் ஹாக்சன வின்டர்ஸ் நிறைய காடுகளையும் மலைகளையும் அதினுடன் இயற்கை அழகுகளையும் மிகுதியாக கொண்ட நாட்டை ஆண்டு வந்தார்.

அவர்களின் நெருங்கிய உறவினர்கள் அருகிலுள்ள அழகிய சூழல் கொண்ட மிகுவல் நகரத்தில் வாழ்ந்து வந்தனர்.

தனது மக்களின் வாழ்க்கை தரத்தை நீட்டிக்க ராஜாவும் ராணியும் நீண்ட தூர வணிக பயணங்களை மேற்கொள்வது உண்டு.

அவர்கள் இல்லாத நேரத்தில், ஸ்டெஃபி மற்றும் ஸ்டேசி ஆகியோர் தங்கள் ஊழியர்களாலும் எஜமானர்களாலும் வளர்க்கப்பட்டு வந்தனர்.

மன்னர் நியமித்த அறிஞர்களால் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுண்டனர்.

பயணத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நிறைய பழம்பெரும்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் மன்னருக்கு இருந்தது. அவைகள் எல்லாம் முன்னோர்களின் வழக்கத்தில் விலைமதிப்பற்றவை என்று பாராட்டப்படதக்கது.

தன் குழந்தைகளுக்கு அவர்களின் பிறந்தநாளில் சில பழம்பொருட்களை பரிசாக வழங்கி வந்தார்.

இப்படியாக போய் கொண்டிருந்த சூழ்நிலையில் இரட்டை சகோதரிகள் காடுகளில் சுற்றுலா சென்று திரும்பும் பொழுது பல இன்னல்களை சந்தித்தனர்.......

இரண்டு கிலோமீட்டருக்கப்பால் இருந்த காட்டிலிருந்து திரும்பும் பொழுது...

இருள் சூழ்ந்த பகுதிகளில் ஸ்டெபி சிறிது பயத்துடன் சுற்றும் மற்றும் பார்த்தாள்.

எச்சரிக்கையாக இருக்க வானத்திலும் அவ்வப்போது ஒரு பார்வை செலுத்தினாள். திடிரென ஒரு நிழல் அவளுக்கு நேராக மேலே உலாவுவதைப் பார்த்து பேய், பேய் என்று கதறி ஸ்டேஸியையும் மேல் நோக்கி பார்க்க செய்தாள்.

அதைப் பார்த்து பயந்த ஸ்டேஸி பயத்தை மறைத்துக்கொண்டு அது வெறும் கழுகுதான் என்று கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.

ஒரு பருந்து அல்லது கழுகின் நிழல் மோசமான ஒன்றாக மாறும் என்பதை ஸ்டேபியாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பயணகலைப்பில் இருந்த ஸ்டேபி சிற்சில நொடிகள் பாதாளத்தின் குளியில் மாட்டினது போல் உணர்ந்தாள்.

பாதாளத்தில் இருப்பது போல் உணரும் பொழுது எங்கு இருக்கிறோம் என்று அவளுக்கு தெரியவில்லை

அந்த இடத்தில் பேய் இருக்க வேண்டும் என்று மட்டும் நம்பினாள்.

அவளுடைய சகோதரி ஸ்டேஸியும் உண்மையில் அதை உணர்ந்திருந்தால், அவளும் இப்போது பயந்திருந்திருப்பாள் என்று நினைத்தாள்.

இவ்வாறு ஒவ்வொரு முறையும் அவள் அமானுஷ்யங்களை பார்க்கும்பொதெல்லாம் திடுக்கிட்டு நின்றுவிட்டு எல்லாரையும் உதவிக்கு அழைத்தாள்.

அவளுடன் வந்த காவளாளிகளும் அந்த உருவங்களை பார்த்தனர். ஆனால் அவைகள் வித்தியாசமாகத் தென்பட்டாலும் மிகவும் உயரத்தில் இருந்ததனால் அதைப் பற்றி பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

ஸ்டேபியும் தான் அரண்டதனால் தான் எல்லாம் தனக்கு பேய் மாதிரி தெரிகிறது என்று தைரியப்படுத்திக்கொண்டாள்.

ஒருநாள் தான் சிறிய விஷயத்திற்கெல்லாம் திடுக்கிடுவதை நிறுத்துவிடுவாள் என்று தனக்குள் நம்பினாள்.

அவர்கள் வந்த பாதை அருகிலுள்ள கிராமத்தை நோக்கி மலைமேட்டிலிருந்து ஊருக்குள்ளே செல்வது எல்லோருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.

வளைவு வாயிலை நெருங்கும் பொழுது ஸ்டேபி வேகமாக முன் சென்று நகரத்தின் வாயுலில் நுழைந்தாள். ஒரு பெரிய உருவம் காற்றைப்போல் ஸ்டேபியின் பின் வந்து கொண்டிருந்த ஸ்டெஸியை இடித்துவிட்டு சென்றது.

பயந்து கத்திய ஸ்டேஸியை எல்லோரும் கவனித்த பின்
திடுக்கிட்டு நின்றனர்.

குறைந்தபட்சம் அந்த வழியில் நடந்தேரின அமானுஷ்ய உலகில் ஸ்டேபி தான் மட்டும் தனியாக இல்லை என்பதை அப்போது உணர்ந்தாள்.

ஸ்டேஸி தனது அக்காவிடம் அவ்வுருவத்தை கழுகு என்று தவறாக கூறியதற்காக மண்ணிப்பு கேட்டுவிட்டு. நடுக்கத்துடன் இருந்த தனது கையினால் அரண்மணையை நோக்கி பாயுமாறு சைகை காட்டினாள்.

ஸ்டெபி அரண்மனை வாசலை நெருங்கிய உடன் தன் கையில் உறுத்திக் கொண்டிருக்கும் மரகத கல்லை என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தாள்.

அதைப் பார்த்து அவளது தங்கை தனக்கு ஏதோ ஞாபகம் வருவதை உணர்ந்து ஆவளிடம் "இந்த மாதிரியான கற்களின் உதவி கொண்டு பெரியப்பெரிய விஷயங்களை சாதிக்க முடியும். "நீ அதை எதற்கும் பொக்கிஷ அறையில் சேமித்து வை" என்று கூறினாள்.

ஸ்டேபி சரி என்று கூறிவிட்டு தீவிரமாக யோசித்தாள். பின்பு

"இது மிகவும் மர்மமான முறையில் வேறு உள்ளது. நமக்கு உண்மையான வழியை நல்ல ஆவிகள் கண்டுபிடிக்கும்படி உதவினால் மட்டும் தான் பிரயோஜனமாயிருக்கும்.
சிறு பிள்ளைகளான நாம் எப்படி சரியான இலக்கை நோக்கிச்சென்று பயனடைய முடியும்"

என்று கேள்வி எழுப்பினாள்.

அதற்கு ஸ்டேஸி " நீ கவலைப்படாதே, நானும் உன்னுடன் சேர்ந்து இதை கண்டுபிடிக்க உதவுகிறேன். நம்முடைய முன்னோர்களின் ரத்த சார்பான வம்சாவழி மூலம் உனக்கு இந்த வாய்ப்பு வந்திருக்கலாம். நாம் எல்லாவற்றையும் பகுத்து பார்த்து கிடைக்கும் சாத்தியக்கூற்றுகளையும் ஆராய்ந்து சரியான வழியை கண்டு பிடிக்க முயற்சி செய்வோம்". என்று கூறிட ஸ்டேபியும் அவள் கூறியதை ஏற்கும்படியாக தலையை ஆட்டினாள்.

அவர்கள் எல்லாரும் குதிரை பயணத்தின் சோர்வினால் அரண்மனை நெருங்கும் திசையை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நிலா வெளிச்சம் முழு அழகுடன் தன்னை வெளிப்படுத்தி அவர்கள் போகும் திசையில் மின்னிக் கொண்டிருந்தது. காவலர்களும் வேலையாட்களும் அவர்கள் இருவருக்கும் முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தனர்.

அரண்மனையில் மகளுக்காக காத்திருக்கும் ராணி பால்கனியிலிருந்து அவர்கள் வருவதை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அரண்மனை வந்தபோது ராணி சந்தோசத்துடன் வரவேற்றாள். ஆனால் குழந்தைகளின் முகமோ வாடி இருந்தது.

ராணி பதைபதைப்புடன் "ஏன் உங்களுடைய முகங்கள் வாடி இருக்கிறது. பயணம் நல்ல விதமாக இருந்ததா?" என்ற குழப்பத்தோடு விசாரித்தாள்.

அவர்கள் இருவரும் கலைப்பினால் சோர்வாக இருக்கிறோம் அம்மா என்று கூறிவிட்டு கலைப்பாற சென்றுவிட்டனர்.

சாப்பிடும் நேரம் அப்பாவிடம் நடந்ததைக் கூறி
சந்தேகம் கேட்கலாம் என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு அப்நனபாவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அம்மா பயணத்தை பற்றி மேலும் விசாரித்தார். அம்மாவிடம் கூறினால் பயப்படுவார் என்று எற்கனவே யோசித்திருந்ததினால் எப்படியோ சமாளித்துவிட்டு இருவரும் தூங்க சென்று விட்டனர்.

இரவு விழுங்கும் நேரம் அப்பா தனது பரிவாரங்களுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
பயணக்கலைப்பில் இருந்ததால் குழந்தைகளைப்பற்றி விசாரித்துவிட்டு எல்லோரும் தூங்க சென்று விட்டனர்.

காலையும் விடிந்தது. அவர்கள் இருவரும் கனவிலிருந்து விழித்தது போல் காலையில் மிகவும் தாமதமாக எழுந்தனர். சாப்பிடும் நேரம் வந்தபோது அப்பா தனது பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் சென்ற பிறகு மன்னர் விழாவிற்கான வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.

ஒவ்வொரு ஆண்டும், கோடைகாலத்தில், ஹெர்லிச் நகர மக்கள் ஹார்மாரியோ (மறுமலர்ச்சி) திருவிழாவை கொண்டாடுவது உண்டு.

மக்களின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகளுடன் தொடங்கும் இந்த விழாவினை சிறப்பிக்க பல சிற்றரசு நாடுகளிளிருந்து வணிகப்பெருமக்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

கலை மற்றும் கட்டிடக்கலை பொறியியல் முறைகளின் கலாச்சாரம் மற்றும் தனிபெருந்தன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்த பருவக் காலங்கலில் ஹெர்லிச் நகரில்
புத்துயிர் பெற்று வந்தன.

விழாவின் சிறப்பான நிகழ்வுகளுக்கு முன்னர் முடிக்க வேண்டிய வேலைகளுக்காக அரண்மணையில் உள்ள அனைவரும் கூடி வேலை பார்த்து வந்தனர்.

ஊழியர்கள் நகரை அலங்கரிப்பதன் மூலமும், புல்வெளிகளின் நடுவே
நீரூற்றுகளைக் கட்டுவதன் மூலமும் முழு நகரத்தையும் புதுப்பித்துள்ளனர்.

நீரூற்றுகள் வெளிப்புற இடத்தில் வரவேற்க்கும் அழகை சேர்க்கின்றன. மீதமுள்ள சுவர்களில் தங்கள் நாட்டின் புகழை வெளிப்படுத்தும் ஓவியங்கள் கூடுதல் அழகை சேர்க்கின்றன.

அரண்மனையின் அலங்காரத்தை தோரணத்தை கொண்டும், அழகான பூ மாலைகளைக் கொண்டும் ஜோடிப்பதைக் கண்டு ஸ்டெஃபியும் ஸ்டேசியும் பார்த்து வியந்து கொண்டிருந்தனர்.

மதிய வேளையில் அவர்கள் இருவரும் அப்பாவின் முகத்தை எதிர் பார்த்துக்கொண்டே சாப்பிட அமர்ந்தனர்.

அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டபின் தங்கள் காரியங்களை குறித்து பகிர்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்டேபி மெதுவாக தன் சந்தேகத்தை கேட்க அதற்கு அந்த பொக்கிஷ தேடுதலைப்பற்றி ஏற்கனவே தெரிந்தது போல் லார்ட் ஹாக்ஃசன் வின்டர்ஸ் தன் பழைய நாட்களை நினைவு கூர்ந்தார்.

தன் நாட்கள் முழுவதையும் அடுத்த உலகத்தின் ரகசியங்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக பிரயாசைப்பட்டு கொண்டிருப்பதை விவரமாக கூற ஆரம்பித்தார்.

ஜார்டின் என்ற பழம்பெரும் ஐரோப்பிய ராஜாங்கத்தில் ஒரு சின்ன பகுதியை லாங்போர்ட் வின்ட்டர்ஸ்(ஹாக்ஃசன் வின்டர்ஸின் தந்தை, அதாவது இரட்டை சகோதரிகளின் தாத்தா) ஆண்டு வந்தார்.

அவருக்கு ஒரே மகன் ஹாக்ஃசன் வின்டர்ஸ் பற்பல வித்தைகளை கற்று வந்தார். தனக்கு பின் தன் மகனை அரசனாக அமரச் செய்ய அவருக்கு எல்லா இடங்களிலிருந்தும் கல்வி, தற்காப்பு கலைகள் மற்றும் பலவித கலைகளையும் அறிஞர்கள் மூலம் கற்றுக் கொடுத்தார். அவரது ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் புதுமையான கலைகள் பலவற்றை செயலாக்கத்தில் கொண்டு வந்தார்.

அவருக்கு பல சிற்றரசர்கள் நண்பர்களாகவும் வணிகத்தில் பங்காளிகளாகவும் இருந்தனர். மக்கள் தொலைதூரத்திலிருந்து வந்து நல்லாட்சி அமைத்ததற்காக
லாங்போர்ட் அரசனை வாழ்த்தி சென்றனர்.

ஜார்டினை ஆளும் பேரரசன் ஹேட்டிரியனுக்கு ஜாஸ்மின் என்ற அழகான மனைவியும், ரோஸ்லின் எனும் அழகான பெண்ணும் இருந்தனர்.

ரோஸ்லினை மணம் முடிப்பதற்காக பற்பல நாடுகளில் இருந்து பலரும் பேரரசர் நடத்தும் சுயம்வரத்தில் பங்கு பெற்று வருங்கால அரசனாவதற்காக போட்டி போட்டுக் கொண்டு வந்திருந்தனர்.

ஹேட்டிரியனுக்கு எப்போதும் தன் நாடு உலக நாடுகளுக்கு ஒரு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.


அதற்காக நிறைய பிரயாசப்பட்டு வந்தான். தன் நாட்டை விரிவாக்க திட்டமிடுவதிலும் பல நாடுகளுடன் போரிட்டு வென்று வருவதிலும் புகழப்பட்டு வந்தான்.

இதை கவனித்த அண்டை நாடுகள் இவன் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று ஹேட்டிரியனுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர்.

எதிரி நாடுகள் ஹேட்டிரியனை தோற்கடிக்க துரோகிகளையும் ஒற்றர்களையும் ஏவிவிட்டு ஆட்சியை கவிழ்க்க முயன்று வந்தனர்.

அன்பு நம்மை பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்ய வைப்பது போல, கல்விக்கண் திறக்காத மக்களோ சூழ்ச்சி செய்யும் ஒற்றனையும் பிற நாட்டு மன்னர்களையும் ஆதரித்தனர்.

இதனை கவனித்த பேரரசன் ஹேட்டிரியன் தன் நாட்டை காப்பாற்ற எல்லாவித ஆய்வுகளையும் முன்னேச்சரிக்கைகளையும் மேற்கொண்டான்.

அறிவே ஆற்றல் மிக்கது என்பதை தன் நாட்டிலிருந்த சிற்றரசர்களுக்கு உணர்த்தி நிறைய போட்டிகளையும், அப்போட்டிகளில் வென்றவர்களுக்கு சலுகைகளையும் வாரி வழங்கினான்.

ஜார்டின் நாட்டு திருவிழாக்களில் எல்லாவித
பிரச்சினைகளையும் ஆலோசித்து அதன் ஆக்கபூர்வம் வெளிவருவதற்கான நேரத்தையும் ஆய்வு செய்துவிட்டு அதற்கான மிகச் சரியான தீர்வுகளையும் அமல்படுத்துகின்றனர்.

இதனை உணர்த்தும் நிகழ்வுகள் சிலவற்றை சமீபத்திய போட்டிகள் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

எந்தவொரு சந்தைப் பொருளாதாரத்திற்கும் முக்கிய கொள்கைகளில் ஒன்று இடைவிடாத போட்டி.

இங்கே மந்திரிகள், மிகவும் செல்வாக்குமிக்க போட்டிகள் சிலவற்றை ஆராய்ந்து அவைகளை உள்நாட்டு போட்டிகளில் மக்கள் ஈடுபடும்படி நடைமுறைபடுத்துகின்றனர் .

சில நாட்டுகளுக்கு, இந்த கட்டாயமான செயல் ஒரு தீவிரமான போட்டியின் வடிவத்தை எடுக்கும். அதன்படி அம்மாதிரியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பிரயோகிக்க ஆரம்பித்தனர்.

சிறிது காலமாக எந்த கட்டிடக் கலை முறை உயர் தரத்தைக் கொண்டுள்ளது என்று இந்நாட்டின் அறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர்.


சுயம்வர போட்டி நாளும் வந்தது. இதில் பங்குபெற ஹாஃசன் வின்டர்ஸும் மற்ற இளவரசர்களைப் போல போட்டியை எதிர்கொள்ள சென்றிருந்தார். போட்டிகளில் வெற்றி பெற்று இளவரசியை மணம் முடிக்கும் எண்ணத்துடன் நிறைய இளவரசர்கள் வந்திருந்தனர்.

முதலில், தாங்கள் யார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதற்கான அடிப்படைகளை சமரசம் செய்யாமல் உயர்ந்த அல்லது நல்ல விதத்தில் வித்தியாசமான கட்டிடக்கலை உருவாக்க விரும்புவோருக்கு போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியில்.ஹோக்ஃசன் வின்டர்ஸும், கிழக்கு நாட்டு இளவரசனுடன் வெற்றி பெற்றான்.

இருவரும் அடுத்து வந்த இறுதிப் போட்டிக்கு தயாராகினர்.

உண்மையில் இந்த இரண்டு போட்டியாளர்களும் எதிர்கொள்ளும் இறுதிச் சவால் எளிமையானது. எது தொழில்நுட்ப போரை வென்றது என்பதை இனி வரும் இறுதிச்சற்று நிரூபிக்கும் வகையில் அமைந்து.



.

.












© BeulahB