...

9 views

மரணத்தை நேசிப்பவள்
ஆம்!
யாரும் ஆசைப்படாத
படுக்கை அது.
அதில் நான் மட்டும் படுத்து உறங்கிட ஆசை. அது என்னமோ? நானறியேன்!

உணர்வு என்ற ஒன்றை நான் கொடுக்கையில் அதன் மீது
பொறாமை கொள்கிறேன்.
ஆம் பொறாமை தான்.எம்மை வெறுத்த உள்ளங்களை , எம்மை ஒதுக்கிய உறவை , எனக்கென்று தீங்கினை செய்த என எல்லாம் உள்ளங்களை எனக்காக கண்ணீர் சிந்தவைப்பளே!

என் இனிய மரணத்தோழி
என்றபோது பொறாமை தான் வருகிறது அவள் மீது...

மரணத்தின் குரல்!
‌. நண்பியே ! உம்மை போல் எம்மை தேடி வருபவர் நேசித்து இருந்தால் அவர்கள் முன் நான்
மாய்ந்து இருப்பேன்!
தற்கொல்லியாய் எம்மை தேடுபவர் யாரும் ...
இன்பம் துன்பம் இரண்டு நம்
வாழ்வின் தராசு என்று அறியாமல் எம்மை சேர்க்கையில்....

அவர்கள் உம்மை போல் நேசித்து இருந்தால் அவர்களுக்காக நான்
தற்கொலை செய்து இருப்பேன்!

வாழ்வின் பள்ளியின் விடைபெறும் நாளே ! உங்கள் மரணம் ! உங்கள் பிரிவு
மற்றவர்க்கு வரும்!

உங்கள் பிரிவால் மற்றவர் கண்களில் வரும் கண்ணீரே!
உங்கள் வாழ்வின் சாதனை!

இறந்திட ஆசைப்படு
உன்னை உதாரணம் என்று சொல்லும் படி
இருந்திட ஆசைப்படு!

........
உணர்வு என்ற ஒன்றை நாம் கொடுக்கும் தருணத்தில் உயிரற்ற தாயின் உயிர்பெற்றிடும்.

கவிக்கு வரிகள் தோழி!
வரிக்கு தனிமை தோழி!
தனிமைக்கு புத்தக தோழி!
புத்தகத்திற்கு வார்த்தை தோழி!
வார்த்தைக்கு இசை தோழி!
இசைக்கு தென்றல் தோழி!
தென்றலுக்கு நிலவு தோழி!
நிலவுக்கு இரவு தோழி!





© Nuradhaag