...

13 views

முடிவில்லாத முதல் காதல்
பவித்ரா மிகவும் தைரியமான பெண்.மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி அப்படியே பேசுபவள்.தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவள்.வீட்டிற்கு ஒரே பெண்.இப்பொழுது சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.தன்னுடன் பணிபுரியும் முகிலனை காதலிக்கிறாள்.இருவரும் கடற்கரைக்கு வந்துள்ளனர்.


பவித்ரா"காலையில் அப்பா கால் பண்ணிருந்தார்.மாப்பிள்ளை போட்டோ அனுப்பிருக்கிறேன் என்றார்.பிடிச்சிருக்குதானு பார்த்து சொல்லச் சொன்னார்."

முகிலன்"நீ என்ன சொன்ன?"

பவித்ரா"நான் எதுவும் சொல்லலை"

முகிலன்"ஏன்?"

பவித்ரா"என்ன சொல்றது?"

முகிலன்"இன்னும் கொஞ்ச நாள் டைம் கேளு"

பவித்ரா"இன்னும் எத்தனை நாள்னு உன்னால சொல்லமுடியுமா?"

முகிலன்"அது....."

பவித்ரா"உன்னால சொல்ல முடியாது.நான்கு வருடமா இதையே தான் சொல்ற.முதலில் உன் தங்கை படிப்பு முடியட்டும் என்றாய், பின் கல்யாணம் முடியட்டும் என்றாய்.இப்பொழுது உன் தங்கைக்கு கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்தாச்சு.இப்பவும் அதையே தான் சொல்கிறாய்."

முகிலன்"என்னை என்ன பண்ணச்சொல்ற.எப்ப நம் விஷயத்தை எடுத்தாலும் வீட்டில பெரிய பிரச்சனையாகுது."

பவித்ரா"சரி இதுக்கு முடிவு தான் என்ன?"

முகிலன்"இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணலாம்."

பவித்ரா"கொஞ்ச நாள் இல்லை எத்தனை வருஷம்னாலும் நான் வெயிட் பண்றேன்.எங்க அப்பாகிட்ட நீ வந்து பேசு"

முகிலன்"இல்லை இல்லை...உங்க அப்பா கிட்ட என்னால பேச முடியாது...நீயே பேசு..ப்ளீஸ்"

பவித்ரா"சரி நானே பேசுகிறேன்.ஆனா உங்க வீட்டில கொஞ்ச நாளைக்கு பிறகு சம்மதிப்பாங்களா??ஒரு வேளை அப்பவும் சம்மதிக்கலைன்னா என்ன பண்றது??"

முகிலன்"தெரியலை"

பவித்ராவின் முகத்தில் ஒரு கசப்பான புன்னகை உதித்தது.பெருமூச்சு விட்டவாறே எழுந்து நடந்தாள்.முகிலன் அவளை தடுக்க இயலாது நின்றான்.



ஐந்து வருடம் கழித்து,

அதே கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.அப்பொழுது மூன்று வயது சிறுமி கடலுக்குள் செல்ல முற்பட்டால்.பவித்ரா அவளை காப்பாற்றினால்.அந்த குழந்தையின் தாய் பவித்ராவிற்கு நன்றி தெரிவித்தாள்.

இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது அந்த பெண்ணின் கணவர் அழைப்பதாய் கூறிச்சென்றால்.அவள் கணவர் யாரென்று பவித்ரா பார்த்தாள்.முகிலன் தான் அப்பெண்ணின் கணவர்.அந்த சிறுமி அவனுடைய மகள்.

அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் எழுந்து நடந்தாள்.அப்பொழுது அங்கு இருந்த ஆடவர் குழுவில் இருந்த ஒருவன் பேசியது காதில் விழுந்தது.

"இந்த பொண்ணுங்களே இப்படித்தான் மச்சி லவ் பண்ற வரைக்கும் பண்ணீட்டு அப்புறம் அம்மா அப்பா ஒத்துக்களைன்னு கழட்டிவிட்ருவாங்க."

அதைக் கேட்டு புன்னகைத்தவாறே தன் இருப்பிடம் நோக்கிச் சென்றால் பவித்ரா.

பவித்ராவை பொறுத்தவரை அவள் முதல் காதலுக்கு என்றும் முடிவில்லை.

எப்போதும் ஆண்களின் காதலை உயர்வாய் காட்டும் சினிமாவிற்கு பவித்ரா போன்ற பெண்களின் உண்மையான காதல் தெரியவில்வையா????