...

13 views

என் காதலி-4
மனது முழுவதும் அவளால் நிரம்பி விட்டது அவளின் நினைவால் உணவு உண்ணும் மனநிலை இல்லை
அலுவலக வேலையில் கவனம் ஏதும் இல்லை இவள் கண் விழித்து இருப்பாளா என்று தெரியாமல் மனதில் எண்ணி ஓட்டங்கள் மட்டுமே
மாலை வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தேன்
வீட்டிற்கு வந்த பின்னாடி தான் நினைவு வருகிறது
வீட்டின் சாவி என் மொபைல் எல்லாம் அலுவகத்திலேயே இருக்கிறது என்று நினைவுக்கு வர மீண்டும் அலுவலகத்திற்கு சென்று எடுத்து கொண்டு வரும் வழியில் திரும்பும் போது தவறான வழியில் வந்த வாகனத்தால் காரின் மீது மோதினேன்
நான் வந்த வேகத்தில் காரின் மீது தூக்கி வீசப்பட்டேன்
தலையில் பலத்த காயங்கள்
ரத்தம் என் முன்னே நீரை போல் சாலையில் ஓடுகிறது
மக்களின் கூட்டம் கூடுகிறது
கண்கள் மங்களாய் மாறி சுயநினைவு இன்றி போகிறேன்

கண் விழித்து பார்த்த போது தலையில் பெரிய கட்டுகள் போடப்பட்டு
சுயநினைவுக்கு வந்து விழித்து கொண்டு இருந்தேன்
அங்கு இருந்த நர்ஸ்
டாக்டர் பேஷன்ட்க்கு சுயநினைவு வந்துடுச்சு டாக்டர் என்று கூறுகிறார்

டாக்டர் வந்து என்னிடம் ஹாய் இப்போ எப்படி இருக்கு என்கிறார்
தலையை மட்டும் ஆட்டினேன்
நம்பர்களை காட்டி எண்ண என்பதை கேட்டார் நானும் கூறினேன்
என் அப்பாவிடம்
இவர்க்கு ஞாபகம் சரியாக உள்ள கவலைப்பட தேவையில்லை என்று
கூறினார்
என் அம்மா அழுது கண்களில் விழி நீர் ஓடிய தடம் அப்பட்டமாக தெரிந்தது
கலங்கிய விழிகளுடன் என்னிடம் வந்து நம்ம குலதெய்வத்தின் திருநீறு பூசி விட்டார்கள்
என் விழிகள் கலங்கி ஒரு புறம் வழிந்து ஓடியது
ஏதோ கிரகம் சரியில்லை போல் என்று என் அம்மா புலம்பி கொண்டு இருந்தார்கள்
நானும் அதுல ஒன்றுமில்லை சரியாகி விடும் என்று நான் அம்மாவிடம் கூறினேன்
இன்னும் 25 நாட்கள் இங்கு இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்


தொடரும்......?!