...

4 views

09) Adventures of the four friends.


" வர்ஷினி , விக்ரம் எப்டி உனக்கு தெரியும் ‌ . " வருண் .

" அது டா , விக்ரம் அப்பாவோட friend ஓட பையன் . அப்படி தான் தெரியும் . " என்று வர்ஷினி கூறிக் கொண்டு இருக்கும் போதே வினுவின் அலறல் சத்தம் கேட்டது .

அதை கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் வர்ஷினி .

" என்ன "

" அ...அ..அங்க " என்று முன்னால் அமர்ந்திருந்த விக்ரமை காண்பிக்க , இவளும் திரும்பி பார்த்தாள் . அங்கு விக்ரமின் உருவம் மாறி இருந்தது . ( அதான் உங்களுக்கே தெரியுமே . ) பக்கத்தில் இருந்தவளோ பார்க்க கொடூரமாக இருந்தாள் ‌ . வாயில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது ( மேடம் சாப்ட்டுட்டு வாய் துடைக்க மற்ந்துட்டாங்க😜 )

அவளின் ஒரு காலில் சதையே இல்லை . வெறும் எலும்பாக இருந்தது . அவளது ஒரு கையும் அப்படி தான் இருந்தது . அவளது வாயை கிழித்து இருந்தனர் . இதை நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் . வர்ஷினியும் பயந்து விட்டாள் .

வருணும் கிருஷ்ஷும் பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை . அவர்கள் பயந்தால் வினுவும் , வர்ஷினியும் பயந்து விடுவார்கள் , என்று நினைத்து , இருவரையும் பையத்தில் இருந்து காப்பாற்ற நினைத்தார்கள் .

" வர்ஷினி . ஓடிடலாம் ‌ . " வருண் .

நால்வரும் இறங்கி ஓட , விக்ரம் கத்தினான் , " அனு baby . love you . " என்று .

அதை கேட்டவுடன் அங்கையே அசையாமல் நின்றாள் வர்ஷினி .

விக்ரம் வர்ஷினியை நெருங்கினான் . அவளது முகத்தின் அருகே அவன் செல்ல , அப்போதும் அதிர்ச்சில் அசையாமல் நின்றிருந்தாள் வர்ஷினி .

" வர்ஷினி வந்துடு டி ‌ . " வருண் கத்தினான் . அப்போதும் அசையாமல்  நின்றிருந்தாள் வர்ஷினி .

வினு ஒரு நொடி கூட தாமதிக்காமல் , ஓடி சென்று வர்ஷினியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடத் துவங்கினாள் ‌ . வர்ஷினி சிலையென  ஓடினாள் . விக்ரம் அதிர்ச்சியில் இருந்தான் .

அவர்கள் ஓடியதும் இவனும் பின்னால் செல்ல , அதற்குள் அவர்கள் நால்வரும் ஒரு குழிக்குள் விழுந்திருந்தனர் . அந்த குழி தன்னை தானே மூடிக் கொண்டது .

விக்ரம் வாயில் ஏதோ முனுமுனுத்து விட்டு அங்கிருந்து அகன்றான் .

.

.

.

குழியில் விழுந்த நால்வரும் மயங்கி இருந்தனர் . வருண் சிறிது நேரத்தில் கண் விழித்தான் .

கண் விழித்தவன் , அருகில் , தலையில் இரத்தம் வழிய படுத்திருந்த வர்ஷினியை பார்த்து கண்களில் ஒற்றை நீர் துளியுடன் அவளை நெறுந்கினான் ‌ . ஆனால் பாவம் அவனால் அசையக் கூட முடியவில்லை . கால் சுளுக்கி இருந்தது . அதனால் அங்கிருந்தே சற்று நெருங்கி , " வர்ஷினி . " என்று கூறி அவளின் தலையை வருடினான் .

அவனது அழைப்பில் கண் விழித்தாள் வர்ஷினி .

" வருண் . " என்று அவனை அழைத்துக் கொண்டே அவனை நெறுங்கியவள் அவனை அனைத்துக் கொண்டாள் .

" என்ன ஆச்சு டா ‌ . " என்று கேட்டாள் .

" கால் சுளுக்கிருச்சு டி . மத்தபடி எதுவும் இல்ல . " வருண் .

" என்ன ஆச்சு டா . " வர்ஷினி .

" நீ ஏன் டி அங்கையே நின்ன . " வருண் .

" தெரியல டா . எதுக்கு அங்க நின்னேன்னு . என்ன நடந்துச்சுன்னு . எதுவுமே புரியல . " என்று ஏதேதோ உளறினாள் .

இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே கண் விழித்தனர் கிருஷ்ஷும் வினுவும் .

வர்ஷியை பார்த்த கிருஷ் , அவளை வந்து அனைத்துக் கொண்டான் .

" love u டி . ஏன் டி இப்டி பண்ண . வந்துருக்கலாம்ல . நானும் முட்டாள் . உன்ன காப்பாத்தாம நின்னுட்டு இருந்தேன்ல . உனக்கு எதுவும் ஆகலைல்ல . " என்று அவளை அனைத்துக் கொண்டு பேசிக் கொண்டே சென்றான் .

" தள்ளி போ டா . idiot . " என்று கூறி , அவனை தள்ளி விட்டாள் வர்ஷினி .

" உனக்கு என்ன பிடிக்கவே பிடிக்காதா டி . " கண்களில் நீருடன் கேட்டான் .


" எனக்கு உன்ன பிடிக்காது . "

" ஏன் டி இப்படி சொல்ற . உனக்கே தெரியும் , நான் உன்ன எந்த அளவுக்கு காதலிக்குறேன்னு . "

" முடியாது முடியாது முடியாது... எனக்கு உன்ன பிடிக்கல . "

" வர்ஷி , இது கத்துற டைம் இல்ல . "

" shut up . நீ உன்னோட வேலைய பாரு . " என்று அவள் கூறி முடிப்பதற்கு முன் , அவள் கன்னத்தில் அவனது ஐந்து விரல்களும் பதிந்து இருந்தது .

" என்ன டி நெனச்சுட்டு இருக்க உன் மனசுல . உனக்கு பிடிக்கலன்னா என்ன திட்டு , வாங்கிக்குறேன் . அவள திட்டுற வேல வச்சுக்காத . "

அவள் கோபத்தில் முகம் சிவந்து நின்றிருந்தாள் .

" வர்ஷினி . I'm sorry . " என்று வினு தலையை குனிந்து கொண்டு கூறினாள் .

" ஏய் நிறுத்து டி . அவ கிட்ட எதுக்கு sorry கேக்குற . நீ உன்னோட வேளைய பாரு . நீ இல்லன்னா இவங்க இப்போ உயிரோட இருந்துருக்க மாட்டிங்க . வந்துட்டா பேச.... " என்று அவன் கூறி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் அறைந்தான் வருண் .

" என்ன டா நெனச்சுட்டு இருக்க . வர்ஷினி டா . " என்றவன் எழ முடியவில்லை என்றாலும் , எழுந்து நின்று வர்ஷினியை தன் தோளேடு அணைத்துக் கொண்டான் .

" இருந்துட்டு போறா . ஆனா வினுவ பத்தி அவ பேச கூடாது ‌ "


" டேய் கிருஷ் . விடு டா . வர்ஷினி , இவன் கெடக்குறான் . நீ எந்த மன நிலைல இருக்கன்னு எனக்கு தெரியும் . நீ கவலை படாத . " என்று வினு கூறிய அடுத்த நொடி அவளை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் ‌.

" I'm sorry . really I'm very sorry . " என்றே அவள் மீண்டும் மீண்டும் முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் .


அதை பார்த்த இருவரும் , " என்னடா இது . இவங்களுக்காக நாங்க சண்ட போட்டா , இப்போ இவங்க ஒட்டிக்குட்டாங்க . " என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டனர் .

" ஓய் லூசு baby . விடு . இப்போ இங்க இருந்து எப்டி தப்பிக்கறதுன்னு பாக்கலாம் " வினு .

.

.

.


© Ashwini