...

4 views

ரஷ்யா நபரின் உயிர் காபாற்றிய சிறுவனின் செயல் (உண்மை சம்பவம்)
சூளூர்பேட்டை இரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது, எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு பச்சை சிக்கனல் போடப்பட்டுள்ளது, மக்கள் இந்த இரயில்வே கேட்டை நடைபாதை நடசாரிகளாக கடந்து கொண்டு இருக்கிறார்கள்.
எக்ஸ்பிரஸ் இரயில் சற்று தூரத்தில் அதிக ஒலியை எழுப்பிக் கொண்டு விரைவாக வந்துகொண்டுயிருக்கிறது
இத் தருணத்தில் இந்திய ரஷ்யா நாடுகளின் நட்புறவு சார்பில் ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி ஏவு தளத்திற்க்கு பணியாற்ற வந்து யிருக்கும் ரஷ்யர்களில், ரஷ்யர் ஒருவர் தனது காதுகளுக்கு ஹேட்செட் மாட்டிக்கொண்டு இரயில்வே கேட்டை கடக்க வந்துகொண்டு இருக்கிறார், எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒலி சப்தங்கள் ரஷ்யர் காதுக்கு விழ வில்லை, பாதையை கடந்து கொண்டு இருக்கிறார்,
இரயிலும் அதிக ஒலியுடன் நெருங்கி கொண்டு இருக்கிறது, அங்கு தேனீர் கடையில் நானும் இருக்கிறேன், அருகில் இருக்கும் அனைவரும் ஓங்கிய குரலில் சத்தமாக அலறி கத்துக் கின்றனர், நானும் ஓ! ஓ!! ஓ!!! யென்றேன், இரயிலும் நெருங்கி விட்டது, ஆனால் ரஷ்யர் நிதானமாக நடந்து வருகிறார்.
இதனை கவனித்த ஒரு சிறுவன் சிறிய கல் ஒன்றை ரஷ்யர் முன்னே வீசினான், தலையை நிமிர்ந்து பார்த்த ரஷ்யர் அனைவரும் இரயில் என்றனர், உடனே ரஷ்யர் அதி வேகமாக ஓடி வந்து விட்டார், இரயிலும் ஒரு நொடியில் கடந்து சென்றது,
ரஷ்யர் அந்த சிறுவனைப் பார்த்து புன்னகை பூத்து டாட்டா சொன்னார், சிறுவனும் புன்னகை பூத்து டாட்டா சொல்லி விட்டு சென்று விட்டனர்.....
- உண்மை நிகழ்வு....
© G.V.KALASRIYANAND