...

4 views

15) Adventures of the four friends.
.

" யாரு அவங்க . எதுக்காக அவங்களோட கண்ண நோன்டி எடுக்கனும் . " வினு .

" சொல்றேன் ‌. " என்றவர் கூற ஆரம்பித்தார் .

.

.

நான்கு வருடங்களுக்கு முன் :

*******  காலேஜ் :

அந்த college இல் இவர்களை தெரியாதவர்கள் இருக்கவே மாட்டார்கள் . சத்தியா , கீர்த்தனா , சந்தோஷ் , ஜீவா , நால்வரும் இனைபிரியா நண்பர்கள் . இந்த நால்வரும் செய்யும் அலப்பறைகள் ஏராளம் . அனைவரையும் கலாய்ப்பதே இவர்களின் அதி முக்கியமான வேலை . ஆனாலும் அவர்கள் மனம் புன்படாமல் கலாய்ப்பார்கள் . மற்றவர்களும் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தனது வேலையை பார்க்க சென்று விடுவார்கள் .

சத்தியா :

நால்வரிலும் அமைதியான ஒரு பெண் . மென்மையானவள் , அனைவரையும் நம்பி விடுவாள் . இவள் மற்றவர்களை போல் இல்லை . மற்றவர்களை விட வித்தியாசமானவள் . உயரம் கொஞ்சம் குறைவு தான் , நிறமும் மாநிறம் தான் . ஆனாலும் அழகி .

கீர்த்தனா :

கொஞ்சம் விளையாட்டு பிள்ளை . வாயாடி என்று கூறலாம் . வாயை வைத்து கொண்டு அமைதியாக இவளால் இருக்க முடியாது . எவரையாவது வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள் . உயரம் கொஞ்சம் அதிகம் , உயரத்திற்கு ஏற்றாற் போல் உடல்வாகு . ஆனால் பார்ப்பதற்கு கொஞ்சம் குண்டாக தெரிவாள் . கள்ளம் கபடமில்லாத 90s kid அவள் .

சந்தோஷ் :

கோபக்காரன் . கீர்த்தனா இவன் சொன்னால் மட்டும் தான் கேட்பாள் . ( அவங்க அப்பா அம்மா சொன்னா கூட கேக்க மாட்டா ) கீர்த்தனாவிற்கு மட்டும் Hitler . மற்ற பெண்களுக்கு ( சத்திய்வை தவிர ) நல்ல பையன் , கனவு நாயகன் ..etc,.  5.7 இருப்பான் . மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம் தான் .

ஜீவா :

சந்தோஷமாக பேசிக் கொண்டு இருப்பவன் . கீர்த்தனாவால் idiot என்று அழைக்கப் படுவான் . அனைவரையும் கீர்த்தனாவுடன் சேர்ந்து கலாய்க்கும் வேலை தான் இவனுக்கு . படிப்பது என்பது சற்று குறைவு தான் என்றாலும் நல்ல மதிப்பெண் எடுத்து விடுவான் . 5.6 இருப்பான் . மாநிறம் தான் இவன் .

( உங்க கிட்ட மட்டும் ஒரு secret சொல்றேன் கேட்டுக்கோங்க . அது என்னன்னா , அந்த நாலு book இருக்கு இல்ல , அதுக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு . அவங்க கிட்ட சொல்லிடாதிங்க😉😝 )

" டேய் idiot . " என்று கத்திக் கொண்டே இருந்தாள் கீர்த்தனா .

" என்ன டி வேணும் உனக்கு . அப்ப இருந்து கத்திட்டே இருக்க . " ஜீவா .

" சத்தியாவும் சந்தோஷும் எங்க டா போணாங்க . " கீர்த்தனா .

" தெரியல . பாக்கலாம் wait பண்ணு . " என்றவன் phoneஇல் இருந்து தலையை எடுக்கவில்லை .

" என்ன டா பண்ற . " என்று கேட்டுக் கொண்டே phoneஐ பிடிங்கி பார்த்தாள் . அவன் temple run விளையாடிக் கொண்டு இருந்தான் .

" என்னது டா இது . " கீர்த்தனா .

" temple run டி . பாத்தா தெரியலையா . " ஜீவா .

" idiot . பேசிட்டு இருக்கேன் இல்ல டா . " கீர்த்தனா .

" பேசு . அது நீ daily பண்ற வேலை தான . அதுக்கும் நான் temple run விளையாடுரதுக்கும் என்ன சம்பந்தம் . "

" போ டா . நான் உன் கூட இனி பேச மாட்டேன் . " என்று கூறி விட்டு அவள் திரும்பி அமர்ந்து கொண்டாள் .

அப்போது அங்கு வந்தனர் சந்தோஷும் சத்தியாவும் .

" என்ன ஆச்சு டா . இவ ஏன் இப்டி உக்காந்துட்டு இருக்கா? " சந்தோஷ் .

" உனக்கு தெரியாதா அவள பத்தி . " ஜீவா .

" தெரியும் . ஆனா இன்னிக்கு என்ன சண்டை . " சந்தோஷ் .

" இவ பேசிட்டு இருக்கும் போது நான் temple run விளையாடிட்டு இருந்தேனாம் . அதான் இவ கோவிச்சுட்டு உக்காந்துட்டு இருக்கா . " ஜீவா .

" temple runஆ . உங்குளுக்கு வேற வேலை இல்லையா . " சத்தியா .

" இவன பாரு டி . நான் லூசு மாதிரி பேசிட்டு இருக்கேன் ‌ . இவன் பாட்டுக்கு விளையாடிட்டு இருக்கான் . " புகார் வாசித்தாள் கீர்த்தனா .

" அவ பாத்துட்டு தான இருக்கா . அப்புறம் நீ லூசுன்னு நீயே ஒத்துக்கிட்ட பாத்தியா . அது தான் கீர்த்து குட்டி . " என்று கூறி அவளது கன்னத்தை பிடித்து கிள்ளினான் அவன் .

" idiot . எதுக்கு டா கிள்ளுன ‌ . " என்று கன்னத்தை தேய்த்துக் கொண்டே கேட்டாள் .

" நீ தான் பேச மாட்டன்னு சொன்னியே . " ஜீவா .

" போடா . உண்மையாவே உன் கூட பேச மாட்டேன் . "

" சரி விடு . உனக்கு இன்னிக்கு Dairy Milk வாங்கி தரலாம்னு இருந்தேன் . "

" Dairy Milkஆ . வாங்கி தாடா . "

" நீ பேச மாட்டன்னு சொன்ன . "

" பரவால்ல வாங்கி தா . "

" லூசு குட்டி . " என்று திட்டினான் ஜீவா .

" பே பக்கி . "

" சரி வாங்க classகு போகலாம் . " என்றாள் சத்தியா .

நால்வரும் class குள் நுழைந்து , அவரவர் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர் .

அப்போது அவர்களின் class குள் வந்தான் ஒருவன் .

உள்ளே வந்தவன் " hi guys . நான் Harry . நான் இந்த collegeகு புதுசு . எனக்கு friends நிறைய பேர் இருக்கனும்னு ஆசை . என்னை உங்க  friendஆ ஏத்துப்பிங்கன்னு நம்புறேன் . " என்றவன் , காலியாக இருக்கும் ஒரு chairஇல் சென்று அமர்ந்தான் .

Classஇல் இருக்கும் அனைவரும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் .


.

.

இவனால் என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம் .

(Additional information :-


story mudunja 2 or 3 days la Naa inga irundhu stories eduthuruven makkale... because, Naa adhigama stories poda poda ungalukku correct ah padikka kadhtama irukkum. if you need 2 read these novels, just go to pratilipi or watt pad (which is easy for you) and search ASHWIN-TheSpeaker.. You can find my profile there...
© Ashwini