...

13 views

வெறும் பத்து ரூபாய் தான்..
குருங்கதை : 1

பார்த்து பத்திரமா போயிட்டுவா என பள்ளி வாகனத்திற்கு கையசைத்தவள்..

அக்கா செத்த நில்லுங்க

இதோ வரேன் என்று வீட்டிற்குள் நுழைந்து கையில் ஒரு பத்து ரூபாய் நோட்டோடு திரும்பினால்..


ஏன்மா என்னாச்சு என்று கேட்ட்டாள் அந்த வார சீட்டு பணம் வசூல் செய்யும் எதிர் வீட்டு பெண்..

இத பிடிங்கோக்கா..
வார சீட்டு பாக்கி போக நேற்று நீங்க எனக்கு கொடுத்த பணத்தில் பத்து ரூபாய் கூடுதலா இருந்தது..

அப்போ கவனிக்கல பிறகு பார்த்துட்டு எடுத்து வச்சேன் இந்தாங்க..

கூட வந்த இன்னொரு பெண் ஏன்மா பத்து ரூபாதானே.. இருக்கட்டும்னு நீயே வச்சுக்கலாமே என்றாள்..

அப்படி இல்லக்கா..
அந்த பத்து ரூபாய்க்கு தானே நாம அந்த பாடு படுறோம்..

பணத்தை வாங்கிகொண்டவளின் கைகளில் அந்த பத்துரூபாய் நோட்டு தீயாய் சுட்டது..

ஆமாம்..
முந்தைய சில வாரங்களுக்கு முன்
இதே போல் ஒரு வார சீட்டு பணம் போக பாக்கி முப்பத்தியாரு ரூபாய்
இன்று வரை அவளுக்கு கொடுக்கவேயில்லை..

அவளும் அதை மறந்திருக்க கூடும் போல அதை பற்றி கேட்கவே இல்லை..

இப்போது இந்த பத்துரூபாய் அவள் நேர்மைக்கு வந்த சோதனையாய் போக..

பரவாயில்லை இதை நீயே வச்சுக்கோமா..

நான் ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் தரவேண்டிய வார சீட்டு பாக்கி முப்பத்தியாரு ரூபாய் இன்னும் உனக்கு தரல..

அதற்கு கழித்துக்கொள் மீதம் பிறகு தருகிறேன் என்று சொல்லி நகர்ந்தாள்.. ✍️


© sha💕jan


Related Stories