...

3 views

உன்னில் கரைந்தேனடா
சின்ன சின்ன ஆசைகளும் உன்னால் நிறைவேறி போனதடா
சின்ன சின்ன ஏக்கங்களும் தாக்கங்களும் உன்னால் மறந்தேனடா
அழகாய் கரம் பிடித்தேன் அழகாய் இரு விழிகள் இடையில் காதல் செய்தேன் உந்தன் பார்வையில் சரிந்து போகின்றேன் ஏனோ உன்னை பார்க்காமல் உன்னிடம் பேசாமல் நிமிடங்கள் கூட நொடிகள் கூட யுகமாய் மாறியது எந்தன் தொலைபேசியில் உந்தன் அழைப்பு வருகையில் ஓடோடி எடுக்கவில்லை உடனடியாக எடுத்தேன் உந்தன் அழைப்பு எந்தன் உயிர் என்று தெரியும் உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவ்வளவு அழகு வானவில்லை போன்று காமத்துடன் பழகவில்லை உண்மையான காதலுடன் பழகிக் கொண்டோம் ஏனோ இருவரும் ஒன்றாகி போனோம் ஒன்றாகி தொலையவில்லை ஒன்றாக இணைந்தோம் இம்மண்ணில் நம் சுவாசக் காட்சி இருக்கும் வரை நம் காதல் எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் தினம் தினம் பூக்களைப் போல நறுமணங்களைப் போல நம் நினைவுகள் மலர்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஏனோ இன்று எந்தன் விதி விளையாடிக் கொண்டு சூழ்நிலை கைதாகி போனேன் எந்தன் உயிர் உந்தன் உயிர் என்று நினைவுகளால் மலர்ந்து கொண்டே இருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் எந்தன் புன்னகையும் எந்தன் மகிழ்வும் நீயே எந்தன் மனதை சொல்லாமல் புரிந்து கொண்ட கள்வன் நீயே தினம் தினம் பூக்கும் கவிதைகளின் நாயகன் நீயே என்னிடம் உள்ள கவிதைகளை மீட்ட வைத்ததும் நீயே சின்னஞ்சிறு கவிதையும் நீயே எங்கு பாடல் ஒலி கேட்ட போதிலும் உந்த நினைவுகள் மட்டுமே எந்தன் மனதில் மலர்ந்து கொண்டே இருக்கின்றது வாழ்ந்து கொண்டே இருப்பேன் உந்தன் உயிரில் உதிரமாக கலந்து கொண்டே இருப்பேன் ஐ லவ் யூ சோ மச் மாமா my dear ********😍😍😍😍