...

6 views

வறுமை......
niroshan#வறுமை கொஞ்சம் கொடுமை என்பதை அன்றுதான் கவணித்தேன்....எங்கள் தெருவில் தார்சாலைப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது .அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களும் ஒரு சிறுமியும் தார்சாலைப் பணியாளர்களுடன் வேலைசெய்து கொண்டிருப்பதை கவணித்தேன் . அதில் ஒரு சிறுவனை அழைத்து தம்பி நீங்கள் மூவரும் படிக்கவில்லையா எனக்கேட்க அச்சிறுவன் கூறிய பதில் என் கண்களை நனைத்து இதயத்தை உருக்கியது.அப்படி அந்த சிறுவன் என்ன கூறியிருப்பான் என நீங்கள் நினைப்பது புரிகிறது வாருங்கள் பார்க்கலாம்.அண்ணா நாங்கள் மூவரும் படிக்கிறோம் ஆனால் அப்பாவோ நன்கு குடிக்கிறார் குடித்துவிட்டு அம்மாவையும் அடிக்கிறார்.ஒருநாள் குடித்துவிட்டு அம்மாவை தள்ளிவிட அம்மாவோ அம்மியில் தடுக்கிவிழ தலையில் அடிபட்டு தரையில் இரத்தம் விழ வலியில் துடித்த அம்மாவை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க மருத்துவரோ அதிக பணம் கேட்க அக்கம்பக்கத்தினர் கொஞ்சம் உதவிசெய்ய கடனோ மூவர் தலையிலும் ஏறிவிட .வழியில்லாமல் இந்த வேலைக்கு வந்தோம் என்றான் .அப்பா இப்போது என்ன செய்கிறார் என்று நான் கேட்க அவர் மேலும் குடித்துவிட்டு கடனைதான் சேர்க்கிறார் என்றான்.....அப்போதுதான் ஒன்றை நன்றாக அறிந்துகொண்டேன் .ஒவ்வோருவரும் ஏதோ ஒரு சூழநிலையால் தான் ஏதோ ஒரு கஷ்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்..இவர்களைப்போன்ற சிறுவர் சிறுமியர்களுக்கு உங்களால் உதவி செய்ய முடியா விட்டாலும் அவர்களை ஒருபோதும் அவமதிக்காதிர்கள்...குடி உன் வாழ்க்கையை மட்டும் கெடுப்பதில்லை உன் பிள்ளைகளின் வாழ்ககையையும் தான் கெடுக்கிறது எனவே குடிப்பதை குறையுங்கள் மகிழ்ச்சியில் நிறையுங்கள் ........!!!நன்றி!!!
© YOUT NIROSHAN.R